திருவண்ணாமலையை மாவட்டம் மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மணிமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ள பள்ளியில் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் இந்த தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் என 2 நபர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இந்த பள்ளியில் கெடாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த முனியன் என்பவரின் மகள் கவுதமி வயது ( 9) 4-ம் வகுப்பு பயின்று வருகிறாள். இந்த மாணவி, பள்ளியில் உள்ள மாணவர்களுடன் சேர்ந்து கொண்டு வகுப்பறையில் பேசிக்கொண்டும் சரிவர படிக்காமலும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.  இதற்கு  தலைமை ஆசிரியை உஷாராணி மாணவியை மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது.


 


 




அதனைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவி வழக்கம்போல் பள்ளிக்கு மாணவி வந்துள்ளார். வகுப்பறைக்கு வந்த மாணவி பாடங்களை படித்து கொண்டு இருங்கள் என தலைமை ஆசிரியர் உஷாராணி தெரிவித்துள்ளார். அப்போது அந்த மாணவி பக்கத்தில் உள்ள மாணவர்களுடன் பேசிக்கொண்டும், சேட்டை செய்துள்ளாராம் மாணவி இதனைக்கண்ட தலைமை ஆசிரியர் உஷாராணி மாணவியை அழைத்து மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவி எத்தனை முறை கூறினாலும் சரியாக படிக்காமல் பக்கத்தில் உள்ள மாணவர்களுடன் பேசிகொண்டே இருக்கிறாய் என்று கூறி மாணவியை பயமுறுத்துவதற்காக  அருகில் இருந்த  தீப்பெட்டியை எடுத்து அதில் இருந்த தீக்குச்சியை பற்ற வைத்து மாணவியின் முகத்தின் அருகில் வைத்து பயமுறுத்தி உள்ளார்  தலைமை ஆசிரியை உஷாராணி. திடிரென மாணவின் முகத்தில் தீக்குச்சியின் நெருப்பு பட்டுள்ளது. விளையாட்டாக செய்த விளையாட்டு மாணவியின் கண்ணத்தில் தீக்காயமாக பட்டுள்ளது. இதனால் மாணவியின் கன்னத்தில் தீ பட்ட மாணவி அழுது கொண்டே வீட்டிற்கு சென்று உள்ளார்.


 




 


இதனையடுத்து மாணவியிடம் எதற்காக அழுகிறியாய் என தாய் கேட்டதற்கு மாணவி பள்ளியில் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.‌ இதுகுறித்து உடனடியாக மாணவியின் தாய் மணிமேகலை பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியையிடம் கேட்ட போது மாணவியின் தாயிற்கு முறையான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.  இதனால் மணிமேகலை கிராம பொதுமக்களுடன் மங்கலம் காவல்  நிலையத்திற்கு சென்று பள்ளி தலைமை ஆசிரியை உஷாராணி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியர் உஷாராணியிடம்  விசாரணை நடத்தினார்கள். மேலும் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி மாணவர்களிடமும் பள்ளி கல்வி துறை அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து தலைமை ஆசிரியர் உஷாராணியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகேயன் உத்திரவிட்டுள்ளார்.