பொறியியல் பட்டதாரி கொகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் மதுரை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. 5 பேர் விடுதலை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. தண்டனை விவரங்கள் வரும் 8 ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரில் இருவர் உயிரிழந்த நிலையில் 15 பேர் மீது விசாரணை நடைபெற்று வந்தது. அதில், 5 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 10 பேர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான தண்டனை விவரம் வரும் 8ஆம் தேதி வழங்கப்படுகிறது. குற்றவாளிகள் மற்றும் விடுதலை செய்யப்பட்டவர்கள் முழு விவரங்கள் வெளியாகியுள்ளது. 


குற்றம்சாட்டப்பட்டவர்கள் பெயர்கள்:


A1 : யுவராஜ்


A2 : அருண் - யுவராஜின் கார் ஓட்டுநர்


A3 : குமார் (எ) சிவக்குமார்
 
A4 : சங்கர்


A5 : அருள் வசந்தம்


A6 : செல்வக்குமார்


A7 : தங்கதுரை (யுவராஜ் சகோதரர்)


A8 :  சதீஸ்குமார்


A9 : ரகு (எ) ஸ்ரீதர்


A10 : ரஞ்சித்


A11 : செல்வராஜ்


A12 : சந்திர சேகர்


A13 : பிரபு


A14) : கிரிதர்


A15 : சுரேஷ்


இதில், சங்கர், அருள்செந்தில், செல்வகுமார் , தங்கதுரை, சுரேஷ் ஆகிய 5 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 10 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.


முன்னதாக, கோகுல்ராஜூடன், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள நடந்தை கிராமத்தைச் சேர்ந்த சுவாதி என்பவரும் ஒரே வகுப்பில் ஒன்றாகப் படித்து வந்தனர். அவர்களுக்குள் நெருக்கமான நட்பு இருந்து வந்தது. கோகுல்ராஜின் சடலம் கைப்பற்றப்படுவதற்கு முதல்நாள் அவரும், சுவாதியும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர். 

 

அர்த்தநாரீஸ்வரர் கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் சிபிசிஐடி போலீசார், அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்ததையும், கோகுல்ராஜை மட்டும் ஒரு கும்பல் தனியாக அழைத்துக்கொண்டு காரில் கடத்திச்செல்வதையும் அந்த வீடியோகாட்சிகளில் இடம் பெற்றிருந்தது. 

 

இதையடுத்து, கோகுல்ராஜின் தாயாரின் மனுவை ஏற்று கோகுல்ராஜ் கொலை வழக்கு மதுரை மவாட்ட வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் 2015 அக்டோபரில் 1ல் கீழமை நீதிமன்றம் எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அந்த ஜாமின் 2018 ஜூன் 2-ல் தேதி ரத்து செய்யப்பட்டது.

 

நாமக்கல் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கு, பின்னர் மதுரை வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண