Just In

மதுரையில் காவல்நிலையத்தை சூறையாடி.. ஏட்டை அறையில் தள்ளி, பூட்டிஅட்டூலியம்.. நடந்தது என்ன?

ATM-ல் பணத்தை கொள்ளையடித்த வடமாநில கும்பல்... 24 மணி நேரத்தில் தட்டித் தூக்கிய விழுப்புரம் போலீஸ்

காவல்நிலையத்திற்குள் குற்றவாளிகள் புகுந்து வெறியாட்டம்.. மதுரையில் நடந்தது என்ன?

'நீ அழகாக இல்லை.. அசிங்கமாக இருக்கிறாய்' திட்டிய கணவன்.. கொதித்தெழுந்த மனைவி செய்த அதிர்ச்சி சம்பவம்

விழுப்புரத்தில் பயங்கரம்.. நண்பனை அடித்து கொன்ற சக நண்பன் - காரணம் என்ன?
இன்ஸ்டாகிராமில் குறைந்த ஃபாலோவர்ஸ் - புருஷனை பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார் - மனைவி புகார்
காதலி இறந்த துக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட வாலிபர் - கடலூர் அருகே சோகம்
அந்த விளை நிலத்தில் தன்னுடைய இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, தனது கை கால்களை தானே கயிற்றால் கட்டிக் கொண்டு அந்த தரை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Continues below advertisement

அசோக்குமார்
கடலூர் அருகே காதலி தற்கொலை செய்து கொண்ட விரக்தியிலிருந்த வாலிபர் தனது கை, கால்களை கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள கஞ்சமநாதன் பேட்டையை சேர்ந்தவர் ஜோதி மகன் அசோக்குமார் (26). இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடலூரில் உள்ள கல்லூரியில் படிக்கும் போது, அவருக்கும் தூக்கணாம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில், அந்த பெண்ணுக்கு அவருடைய பெற்றோர் வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து உள்ளனர். இதனால் மனமுடைந்த அந்த இளம் பெண் கடந்த 29ம் தேதி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் காதலன் அசோக் குமார் கடந்த சில வாரங்களாக மன உளைச்சலிலும், விரத்தியிலும் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை தனது பெற்றோரிடம் வெளியே சென்று விட்டு வருவதாக அசோக்குமார் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப் பார்த்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை தம்பி பேட்டையில் உள்ள விளைநிலத்தில் உள்ள தரை கிணற்றில் அசோக்குமார் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். நேற்று மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற அவர், அந்த விளை நிலத்தில் தன்னுடைய இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, தனது கை கால்களை தானே கயிற்றால் கட்டிக் கொண்டு அந்த தரை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த குள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அசோக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
Continues below advertisement
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060
Continues below advertisement
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.