Crime : நடத்தையில் சந்தேகம்.. கணவன் செய்த கொடூர கொலை! போலீசார் விசாரணை
Crime news : மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்ப்பட்டு திருப்பத்தூரில் கணவனே வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.

குடும்ப தகராறு காரணமாக திருப்பத்தூரில் கணவனே மனைவியை வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கணவன் மனைவி தகராறு:
திருப்பத்தூர் பொன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் ரமேஷ் (53) இவரது இரண்டாவது மனைவி தீபா (வயது 35) இருவருக்கும் குடும்பத் தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் ரமேஷ்க்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு பாவுசா நகரில் உள்ள ரமேஷின் தங்கையான வரலட்சுமி வீட்டிற்கு தூங்குவதற்காக தீபா சென்றுள்ளார்.
Just In




இதையும் படிங்க: டிவிஎஸ் எக்ஸ்எல்தான் எனது டார்கெட் ... வினோத திருடன் - சிக்கியது எப்படி?
கணவர் தப்பியோட்டம்:
அப்போது இருவருக்கும் இடையே திரும்பவும் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் வீட்டில் இருந்த கத்தியால் தீபாவை சரமாரியாக உடலில் பல்வேறு இடங்களில் வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் உட்கொட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் (பொறுப்பு) சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு வேலூர் அடுக்கும் வரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட ரமேஷை போலீசார் கைது செய்தனர். மேலும் படுகொலை செய்த தீபாவின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
இதையும் படிங்க: 'கர்ப்பத்தை கலைத்து விடு' பட்டதாரி இளம்பெண்ணை கர்ப்பமாக்கி மோசடி - ஜிம் உரிமையாளர் கைது
பெண்ண்னுக்கு பாலியல் தொல்லை: .
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பகுதியை சேர்ந்தவர் அருண்(35). இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் கார் ஒட்டுனராக வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி அஸ்வினி, 5 வயது மகள் அக்ஷரா, 3 வயது மகன் அஷ்விக் ஆகியோர் நியூடவுன் பகுதி சேஷாகிரி ராவ் தெருவில் உள்ள வாடகை வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாக தங்கி வருகின்றனர்.பிள்ளைகள் இருவரும் அருகில் உள்ள பள்ளிக்கு கல்வி பயின்ற சென்று வருகின்றனர்.
கணவர் அருண் வாரம் ஒரு முறை வீட்டிற்க்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் வீட்டில் தனியாக பெண் இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து கதுவை தட்டி உள்ளார்.
உறவினர் வந்து இருக்கும் என்ற கருதி அஸ்வினி காதுவை திறந்துள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் தன்னுடைய ஆண் உறுப்பு காட்டி பெண்ணை பாலியல் சீண்டலுக்கு முயற்சித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த பெண் கூச்சல்யிட்டதால் மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஒட்டம் பிடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பெண் உடனடியாக காவல் எண் 100 க்கு தொலைபேசி மூலமாக புகார் தெரிவித்துள்ளார்.பின்னர் சம்பவம் குறித்து தன்னுடைய கணவருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர போலீஸார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.