வந்தவாசி அருகே தாயை கொலை செய்தவர் வீட்டில் புகுந்து 6 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் திருடிய அண்ணன் தம்பியை காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவான இவர்களின் சகோதரி, மைத்துனரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி வயது (65). இவரது மனைவி முனியம்மாள் வயது (62). இவர்களது நிலத்தின் அருகே அதே கிராமத்தை சேர்ந்த சங்கர் வயது (50) என்பவருக்கு சொந்தமான விவசாய நிலமும் உள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே வரப்பு பிரச்சினையில் தகராறு ஏற்பட்டு இருந்து வந்துள்ளது. கடந்த 6-ந் தேதி முனுசாமி, அவரது மனைவி முனியம்மாள் வயது (62) ஆகிய இருவரும் தங்களது வயலுக்கு சென்று வேர்க்கடலை செடியில் களை பறித்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த சங்கர், அவரது மனைவி எட்டியம்மாள் வயது (45)  இவர்களுக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. 


 




வீடு புகுந்து கொள்ளை:


இதனைத்தொடர்ந்து, ஒருவரை ஒருவர் சரமாரியாக அங்கேயே தாக்கிக்கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த சங்கர், அவரது மனைவி எட்டியம்மாள் இருவரும் சேர்ந்து, தங்களது கையில் இருந்த மண்வெட்டியால் முனியம்மாள் கழுத்தில் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே முனியம்மாள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தெள்ளார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சங்கர், எட்டியம்மாள் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால், அவர்களது மகன் சிவராஜ் வயது (23) சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார். கடந்த 15-ந் தேதி முனுசாமி மகன்கள் அண்ணாமலை, சரவணன், இவர்களது சகோதரி, மைத்துனர் மற்றும் உறவினர்கள் என அனைவரும் சிறையில் இருக்கும் சங்கர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். 


 




 


பின்னர், பீரோவில் இருந்த 6 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு, வீட்டின் ஜன்னல், கதவுகள் மற்றும் மாட்டுக் கொட்டகை ஆகியவற்றை சரமாரியாக தாக்கி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த சங்கரின் மகன் சிவராஜ் சென்னையிலிருந்து கூடலூர் கிராமத்திற்கு வந்துள்ளார். அப்போது, முனுசாமி உள்பட குடும்பத்தினர் சிவராஜை கொலை செய்யாமல் விடமாட்டோம்.


போலீசார் விசாரணை:


உங்களை இந்த கிராமத்தில் வாழவிடமாட்டோம் என கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து தெள்ளார் காவல்நிலையத்தில் சிவராஜ் புகார் அளித்துள்ள்ர். உடனடியாக அதன் பேரில் தெள்ளார் காவல்துறையினர் ஆய்வாளர் ரேகாமதி வழக்குப்பதிவு செய்து அண்ணாமலை, அவரது தம்பி சரவணன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் தலைமறைவான இவர்களது சகோதரி, மைத்துனரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.