Crime : கொல்கத்தாவில் சிறுமி ஒருவருக்கு உணவில் போதைப்பொருள் கலந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கொல்கத்தாவின் ஹரிதேவ்பூர் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் வழக்கில் ஒரு பெண்ணும் அவரது மகனும் நேற்று கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின்பேரில் தாய், மகன் இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.


சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை:


இது குறித்து போலீசார் கூறியதாவது, பாதிக்கப்பட்ட சிறுமி ஹரிதேவ்பூர் பகுதியில் உள்ள ஒரு அழகுநிலை பயிற்சிக்கு செல்வது வழக்கமானதாக இருந்தது. அங்கு இருக்கும் ஒரு பெண் மற்றும் அவரது மகனுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் அடிக்கடி வெளியே செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். அதன்படி, ஒரு நாள் அந்த சிறுமியை மதிய உணவிற்கு அவரது வீட்டிற்கு அழைத்தனர். அப்போது போதைப்பொருள் கலந்த உணவு அந்த சிறுமிக்கு அளிக்கப்பட்டது. இதனால் மயக்க நிலைக்கு சென்ற சிறுமியை,  இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக" தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


போக்சோ சட்டம்


கடந்த சில ஆண்டுக்களாக 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் இதுபோன்ற செய்திகள் சமூக ஊடங்கள் வாயிலாகவும், தொலைக்காட்சிகள் வாயிலாகவும் நாம் காதுகளில் வந்து தஞ்சமடைக்கின்றது. இத்தகைய கொடுமைகள் இனி எந்தவொரு சிறுமிகளுக்கும் நடைபெற கூடாது எனவும், பொதுமக்கள் கடுமையான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற தவறு செய்பவர்களுக்கு காவல்துறையினரால் போக்சோ சட்டம் பதியப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். இந்த நிலையில், போக்சோ சட்டம் என்ன என்பது பற்றி இங்கு தெரிந்து கொள்வோம். 18 வயதிற்க்குட்பட்ட ஆண், பெண் குழந்தைகளை பாதுகாக்கப்படுபதற்கு கொண்டுவரப்பட்டதே இந்த போக்சோ சட்டம். இந்த சட்டம் எந்த அளவிற்கு பாதுகாப்பானது.


குற்றங்கள்:


இதன் சட்டம் மற்றும் ஷரத்துகள் பின்வருமாறு : 


Penetrative sexual Assault - பலவந்தமான பாலியல் வன்கொடுமை செய்தல்
Aggravated penetrative sexual assault - தீவிரமான ஊடுருவும் பாலியல் தாக்குதல்
Sexual Assault - பாலியல் தொல்லை
Aggravated Sexual Assault - எல்லைமீறிய பாலியல் தொல்லை
Sexual Harassment - பாலியல் தொந்தரவு
Taking pornographic pictures of children - குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்தல்


இந்த ஆறுவகை பாலியல் குற்றங்களும் இந்த போக்சோ சட்டத்தின் கீழ் வருகின்றனர்.


18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் 7 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை
இதே குற்றத்தை பெற்றோர், பாதுகாவலர் செய்தால் 10 ஆண்டுகள் சிறை 12 வயதிற்கு கீழான குழந்தைகளை வன்கொடுமை செய்தால் - மரண தண்டனை (இந்த சட்டம் 2018ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது)