Crime: மத்திய பிரதேச மாநிலத்தில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.


மத்திய பிரதேச மாநிலம் கத்வா மாவட்டத்தில் உள்ள மொகத் பகுதியில் செயல்படும் மதரசா எனப்படும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் ஒரு 5 வயது சிறுமி படித்து வந்திருந்தார். அப்போது அதே பள்ளியில்  மவுல்வி அப்துல் சமத் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அதே பள்ளியில் படிக்கும் 5 வயது சிறுமியை, ஆசிரியர் மவுல்வி அப்துல் சமத் பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில நாட்களாகவே சிறுமி சோர்வுடனும், உடல்நிலை சரியில்லாமலும் பள்ளிக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்தார். உடனே அவரது தாய் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். இதை அடுத்து மதரசா பள்ளி ஆசிரியர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர்.


இது சம்பவம் அம்மாநில உள்துறை அமைச்சர் நதரோத்தம் மிஷ்ரு நேற்று கூறுகையில், "அந்த மதரசாவில் வேறெந்த சிறுமியாவது இம்மாதிரி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி உள்ளாரா என்பதை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாநில காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.


இதுபோன்ற கொடூரமான சம்பவங்கள் தொடர்ந்து இந்தியாவில் நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கூட, ஹைதராபாத் மாநிலத்தில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை  செய்த பள்ளி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாரா மலைப்பகுதியில் தனியார் மழலையர் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் படிக்கும் 4 வயது சிறுமி ஒருவர் படித்து வந்தார்.


அதே பள்ளியில் முதல்வரின் ஓட்டுநரான ரஜினிகுமார் என்பவர் பள்ளியில் ஆய்வகங்களை பராமரித்தல், பள்ளி அலுவலக வேலையில் போன்றவற்றையில் ஈடுபட்டு வந்திருந்தார். இந்நிலையில் அந்த பள்ளியில் இருக்கும் 4 வயது சிறுமியிடம் அன்பாக பழகுவதுபோல நடித்துவந்தார். அப்போது அந்த சிறுமியுடன் பள்ளியில் நெருக்கமாக பழகி, அந்த சிறுமியை கடந்த இரண்டு மாதங்களாக பள்ளியிலேயே பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டுள்ளது. 


மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த இரண்டு மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருந்தார். கடந்த இரண்டு மாத காலமாக தினமும்  வீட்டிற்கு செல்லும்போதெல்லாம் குழந்தை மிகவும் களைப்புடனும், வலியுடனும் சென்று கொண்டிருந்தார் எனக் கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமியை வழக்கமாக செய்யும் வேலைகளில் ஒரு ஈடுபாடு இல்லாமல் இருந்தார். பின்பு பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோருடன் பள்ளிக்கு சென்று தன்னை பாலியல் வன்கொடுமை செய்த அந்த நபரை, சிறுமி தன் தாயிடம் சுட்டிக்காட்டினர் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பஞ்சாரா காவல்துறையில் புகார் ஒன்று அளித்தார். புகாரை அடுத்த அந்த பள்ளியில் பணியாற்றிய ஓட்டுநர் ரஜினிகுமாரை அதே பள்ளியில் பஞ்சாரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.