Crime : கொல்கத்தாவில் தத்தெடுத்த இரண்டு குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கணவன், மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


கொல்கத்தா குருகிராம் பகுதியைச் சேர்ந்த  நிதின் சர்மா மற்றும் அவரது மனைவிக்கு நீண்டு நாட்களாக குழந்தைகள் இல்லாமல் இருந்நதாக கூறப்படுகிறது. இதனால் கொல்கத்தாவில் உள்ள ஒரு அமைப்பில் மார்ச் 30-ஆம் தேதி  அன்று  2 வயது சிறுமி மற்றும் 4 வயது சிறுவனை இந்த தம்பதியினர் தத்தெடுத்தனர்.


பிறகு , 3 மாதங்கள் அந்த குழந்தைகளை வளர்ப்பதாக நடித்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.  3 மாதங்கள் கழித்து ஜூலை 12-ஆம் தேதி அந்த குழந்தைகளை ஹோமில் கொடுத்தனர். அப்போது, அந்த ஹோமில் இருப்பவர்கள் குழந்தைகளை பரிசோதனை செய்ய அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.


அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தெரிவித்தனர். பின்பு,  நவம்பர் 29-ஆம் தேதி அன்று, கொல்கத்தாவில் உள்ள ரவீந்திர சரோபர் காவல் நிலையத்தில் இந்திய மறுவாழ்வு சங்கம் சார்பில் தீபக் சின்ஹாவால் என்பவர் புகார் அளித்தார். 


இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரி  முகேஷ் குமாரி, "கொல்கத்தா போலீசாரிடம் இருந்து சில தகவல்களுக்காக காத்திருக்கிறோம். குற்றவாளிகள் விரைவில் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தைகள் தற்போது நல்ல நிலையில் இருப்பதாகவும் தம்பதியினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.


மேலும், "தம்பதியினர் இரண்டு குழந்தைகளை ஹோமில் விட்டு செல்வதற்கு முன்பு மூன்று மாதம் அந்த குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் எதற்காக இதுபோன்ற செயலில் ஈடுபட்டனர் அவர்கள் யார் என்பதை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார். குற்றம் சாட்டப்பட்ட தம்பதி மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள அவர்களை தீவிரமாக போலீசார் தேடி வருவதாக கூறப்படுகிறது.


மற்றொரு கொடூர சம்பவம்:


கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்த 45 வயது நபர், தனது 13 வயது மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி கணவர் மற்றும் மகளை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.  தாய் பிரிந்த சோகத்தில் அந்த சிறுமிக்கு மனநலம் பாதித்ததாக கூறப்படுகிறது. 


இந்தநிலையில், அந்த 13 வயது சிறுமியின் தந்தை தன் சொந்த மகள் என்றும் பாராமல் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார். ஒரு கட்டம்வரை பொறுமையாக இருந்த சிறுமி தனது தந்தையால் தனக்கு ஏற்படும் கொடுமையை பள்ளி ஆசிரியர்களிடம் சொல்லி கதறி இருக்கிறார். இதையடுத்து சிறுமியின் பள்ளி ஆசிரியர்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்க, இந்த கொடுமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 


போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், நடத்திய முதற்கட்ட விசாரணையில் சிறுமியை அவரது தந்தையே பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து, இந்திய தண்டனைச் சட்டம் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளில் குற்றவாளி என நிருபித்து, 107 ஆண்டுகள் சிறை தண்டனை 4 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர்.