கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சபரிநாத் (40). இவர் சென்னையில் உள்ள அயனாவரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். அண்மையில் இவரது மனைவி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததை தொடர்ந்து, இவரது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டிருந்தார். விடுமுறை நாட்களில் அவ்வப்போது சபரிநாத் இங்கு வந்து தங்கி வந்துள்ளார்.




இந்த நிலையில் இன்று காலை ஆய்வாளர் சபரிநாத் வீட்டில் இருந்த போது, அவரது வீட்டில் குடியிருந்து வந்த 37 வயதான சாந்தி என்பவர் சமையல் செய்வதற்காக சபரிநாத் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. அப்போது திடீரென பயங்கர சத்தம் கேட்டதும், கீழ் வீட்டில் குடியிருக்கும் சாந்தியின் உறவினர்கள் மேலே சென்று பார்த்த போது, சபரிநாத் மற்றும் சாந்தியும் தீயில் எரிவது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்பு துறைக்கும், பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் அங்கு சென்ற தீயணைப்பு மீட்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் காவல்துறை ஆய்வாளர் சபரிநாத் மற்றும் சாந்தி இருவரும் தீயில் கருகி உயிரிழந்தனர். 




வீட்டில் இருந்த பிரிட்ஜ் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் இருவரும் உயிரிழந்து இருக்கலாம் என காவல் துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வீட்டில் ஆய்வில் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இருவரது உடல்களை கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூராய்விற்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குரீத்து பொள்ளாச்சி மேற்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் ஆய்வாளர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண