இரண்டு தினங்களுக்கு முன்பு, உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகரில், சூட்கேசில் ஒரு குழந்தையின் சடலமானது கண்டெடுக்கப்பட்டது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியது.


தாய் தலைமறைவு:


இந்நிலையில், குழந்தையின் அடையாளமானது கண்டறியப்பட்டது. அது 3 வயது உடைய  பெண் குழந்தை என்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, குழந்தையின் வீட்டிற்குச் சென்ற காவல்துறையினர் , சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களது வீட்டில் பாத்திரங்கள் கழுவும் இடத்தில் ரத்த கறை இருப்பதை கண்டறிந்தனர். ஆனால், அப்போது வீட்டில்  குழந்தையின் தந்தை மற்றும் தாய் இருவரும் இல்லை.


குழந்தையின் தந்தையை தொடர்பு கொண்டு பேசிய காவல்துறையினர் சம்பவம் குறித்து கேட்டனர். ஆனால், தனது உறவினர் வீட்டில் இருப்பதாக தெரிவித்தார். மேலும் இச்சம்பவம் குறித்த அறிந்த தந்தை, காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.


இதையடுத்து, குழந்தையின் தாய் செல்போன் எண்ணை வைத்து , அவரது இருப்பிடத்தை காவல்துறையினர் கண்டறிந்தனர். அங்கு, அவர் காதலுடன் இருந்திருக்கிறார். இதையடுத்து கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.


Also Read: கத்தியால் குழந்தைகளின் பிறப்புறுப்பில் சூடு: சித்தி வெறிச்செயல்; 2வது மனைவி மீது கணவர் புகார்


ஏன் குழந்தையை கொன்றீர்கள்?


விசாரணையில், ஏன் குழந்தையை கொன்றது குறித்து கேட்டபோது, குழந்தையின் தாயான காஜல் தெரிவிக்கையில் “தான் கணவரை விட்டு பிரிந்து காதலுடன் வாழ ஆசைப்பட்டேன். என் மகள் இருப்பதை காதலன் விரும்பவில்லை. ஆதலால் குழந்தையை கொலை செய்தேன்.


எப்படி செய்தீர்கள் என கேட்டபோது , “தொலைக்காட்சியில் வரும் குற்றச் சம்பவங்கள் தொடர்பான காட்சிகளை பார்த்தேன், அதையடுத்து கொலை செய்துவிட்டு சூட்கேசில் அடைத்து குப்பையில் போட்டுவிட்டேன்” என காஜல் தெரிவித்தார்.


மேலும், இந்த சம்பவத்தில் ஏதேனும் காதலனுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.


இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்து, பெற்ற குழந்தையை கொன்ற சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Also Read: Crime: பெண் குழந்தையை ஒரு இலட்ச ரூபாய்க்கு விற்ற தாய் கைது