காதல் திருமனம்

 

சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் கவுசல்யா. காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் , இவர்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். காதலித்து கொண்டிருக்கும் பொழுது அடிக்கடி இருவதும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். திருமணத்திற்கு முன்பே கௌசல்யா கர்ப்பமாகி உள்ளார். இதனால், கடந்த 5 மாதத்திற்கு முன்பு, இருவரும்  திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு, கடந்த 2 மாதத்திற்கு முன்பு, மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது

 

குழந்தையை பார்க்க வேண்டும்

 

அப்போது, ரஞ்சித்குமார், மனைவி கவுசல்யா மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றார். இந்நிலையில், மருத்துவமனையில் கணவன் மனைவி ஆகிய இருவருக்கும் கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது மருத்துவமனையில் இருந்து கவுசல்யாவின் பெற்றோர், கவுசல்யாவையும், கை குழந்தையையும் செம்மஞ்சேரிக்கு அழைத்து வந்துள்ளனர்.  அடிக்கடி ரஞ்சித் குமார் தன் குழந்தையை பார்க்க வேண்டும் என தொலைபேசி மூலம் கௌசல்யாவிடம் பேசி வந்துள்ளார்.

 

நேற்று காலை ரஞ்சித்குமார், செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் உள்ள மனைவி வீட்டிற்கு வந்து, கவுசல்யாவை புறப்பட சொல்லி கூறவே, 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார், கவுசல்யாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், தலை மற்றும் காலில் பலத்த காயமடைந்த கவுசல்யாவை, பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது ரஞ்சித்குமார், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 2 மாத கைக்குழந்தையின் காலை பிடித்து சுவரில் அடித்ததில், குழந்தையின் விலா எலும்பு நொறுங்கியது.

 

குழந்தை வீட்டிலேயே பரிதாபமாக உயிரிழந்தது

 

மேலும், பின் மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டு, குழந்தை வீட்டிலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் செம்மஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ரஞ்சித்குமாரை கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி மேற்கொண்டு l வருகின்றனர். இச்செய்தி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.