ஒன்றாக மது அருந்தும் நண்பர்கள்


சென்னை (Chennai News) : சென்னை அடுத்த பள்ளிக்கரணை அருகே உள்ள மயிலை பாலாஜி நகர்  மூன்றாவது பகுதியை சேர்ந்தவர் பிரஷாந்த் ( வயது 27 ). இவர் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கட்டிடங்களுக்கு  ஒப்பந்த முறையில் பெயிண்ட் அடிப்பதை தொழிலாக கொண்டு வந்துள்ளார். இவருக்கு பாலாஜி நகர் பகுதியை சேர்ந்த சரத்குமார் (வயது 24 ) , இமானுவேல் (வயது 20),  ஜெபராஜ் (வயது 21 ) ஆகியோர் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.  இவர்கள் அனைவரும் அவ்வப்பொழுது, அடிக்கடி ஒன்றாக மது அருந்துவதை பழக்கமாகக் கொண்டு வந்துள்ளனர்.


கைகலப்பாக மாறிய  சம்பவம்


இந்த நிலையில்  கடந்த 22 ஆம் தேதி, வேளச்சேரி ரயில்வே குடியிருப்பு  அருகே, அதே பகுதியை சேர்ந்த திலகேஸ்வரன் ( வயது 22 ) மற்றும் முகமது  ஷகீத் ( வயது 21 ) ஆகியோர் ஒன்றாக மது அருந்தி உள்ளனர். ஒன்றாக மது அருந்தி பேசிக் கொண்டிருந்த பொழுது இவர்களுக்கிடையே சிறிய வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த வாய் தகராறு கை கலப்பாக மாறி  ஐந்து பேரும் பிரசாந்தை தாக்கியுள்ளனர். பிரசாந்த் அவர்களை எதிர் தாக்குதல் தாக்கியுள்ளார்.


உயிருக்கு போராடிய பிரசாந்த்


இதில் ஆத்திரம் அடைந்த 5 பேரும் சேர்ந்து மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரசாந்தை சரமாரியாக வெட்டி சாய்த்து உள்ளனர். பிரசாந்த் அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்துள்ளார்.  அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். இதைப் பார்த்த ஐந்து பேரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில்  மயங்கி கிடந்த பிரசாந்தை அப்பகுதி மக்கள் மீட்டு பள்ளிக்கரணை பகுதியில் இருந்த பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த கொலை முயற்சி சம்பவம் குறித்து ஒருபுறம் பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


 பள்ளிக்கரணை போலீசார்


அங்கு சிகிச்சை பலனின்றி பெயிண்ட் பிரசாந்த் நேற்று முன்தினம் பரிதாபமாக  உயிரிழந்தார். பிரசாந்த்  உயிரிழந்தது குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் பெயரில் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக  அந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு  பள்ளிக்கரணை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.


எங்களுக்கும் முன்பகை


இது தொடர்பாக ஐந்து பேரையும் போலீசார் தேடி வந்த நிலையில் மேடவாக்கம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் ஐந்து பேரும் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதனைஅடுத்து காவல்துறையினர் அவர்களுடன் விசாரித்த பொழுது, “பிரசாந்த், எங்கள் அனைவரையும் அடிக்கடி துன்புறுத்தி வந்ததும், எங்களைப் பற்றியும் எங்களுடைய தாயைப் பற்றியும் தரக் குறைவாகவும் இழிவாகும் பேசி வந்து இருப்பதை வாடிக்கையாக கொண்டு வந்ததால்,  அவருக்கும் எங்களுக்கும் முன்பகை இருந்து வந்தது” சம்பவத்தன்று  மது போதையில் இருந்த அவரை  சரமாரியாக  வெட்டி  கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனை அடுத்து 5 பேரும்  ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது