சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தொழிலதிபர் வீட்டில் 100 சவரன் தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


சென்னையை அடுத்த கீழ்ப்பாக்கத்தில் உள்ள தொழிலதிபர் சாய் வெங்கட் தொழில் நிமித்தமாக நேபாளத்துக்கு சென்ற நிலையில் மாற்று சாவியை பயன்படுத்தி, கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியுற்றார். இதையடுத்து, தொழிலதிபர் சாய் வெங்கட் தனது வீட்டில் 100 சவரன் தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுவிட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.