செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தின் பின்புறம் பார்த்தசாரதி தெருவை சேர்ந்தவர் மாரி (எ) மாரிமுத்து (50). பெயிண்டரான இவருக்கு திருமணமாகவில்லை. இவர் ஓய்வு நேரத்தில் செங்கல்பட்டு, பள்ளிக்கூட தெருவில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் தூங்குவாராம்.  இந்த நிலையில், இன்று அதிகாலை தலை நசுங்கிய நிலையில் பெயிண்டர் மாரிமுத்து இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே 4 பெரிய கருங்கற்கள் கிடந்தன. இதுகுறித்து தகவலறிந்ததும் செங்கல்பட்டு டிஎஸ்பி பரத் தலைமையில் போலீசார் வந்து விசாரித்தனர். பின்னர் பெயிண்டர் சடலத்தை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.



 

இதுபற்றிய புகாரின்பேரில், செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட பெயிண்டர் மாரிமுத்துவுடன் சேர்ந்து பாழடைந்த வீட்டில் பிரபா என்பவர் தூங்குவாராம். ஆனால் இன்று காலை அவருடன் தங்கியிருந்த பிரபாவை காணவில்லை. எனவே, அவர்தான் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் போலீசார் கூறுகின்றனர்.மது அருந்தும்போது ஏற்பட்ட வாய்த்தகராறில் பெயிண்டர் மாரிமுத்து கற்களால் அடித்து கொலை செய்யப்பட்டாரா, முன்விரோத தகராறில் பிரபாவே அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டாரா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

 



Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண