செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த கருநீலம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் எலக்ட்ரிஷன் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி தேன்மொழி என்பவர் சித்தார்த் (4) லோகேஷ் (3) ஆகிய இரு பிள்ளைகளுடன் அருகில் உள்ள கோவிலுக்கு இருசக்கர வாகனத்தில், சென்று வரும் பொழுது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் லேசாக உரசி நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.



 

இதில் பின்னால் வந்த டிராக்டர் இருசக்கர வாகனத்தின் மீது ஏரியில் தாயின் கண் முன்னே இரண்டு பிள்ளைகளும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர், பலத்த காயமடைந்த தேன்மொழியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்பு இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாயின் கண் முன்னே இரண்டு பிள்ளைகளும் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

 



 

இதுகுறித்து காவல்துறையினிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் கருநீளம் பகுதியைச் சேர்ந்த தேன்மொழி என்பவர் தனது மகன்கள் சித்தார்த் மற்றும் லோகேஷ் ஆகிய இருவருடன், சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக,  பின்னாடி வந்த வாகனம் இடித்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அதற்குப் பின்னால் வந்த டிராக்டர்,  மேலே ஏறியதில் சம்பவ இடத்திலேயே இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்த தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தனர்.