செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில், கள்ளக்காதலால் டிரைவர் வெட்டி படுகொலை கள்ளக்காதலி மகன் உட்பட 6 பேர் கைதுசெய்து சிறையில் அடைப்பு


செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த மேலகனக்கம்பட்டு கிராமத்தில் வசித்து வந்தவர் கண்ணன் வயது 45 . இவர் வேன் டிரைவராக வேலை செய்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து தனது வீட்டிற்கு மோட்டர் சைக்கிள் திருக்கழுக்குன்றம் அடுத்த ஒரகடம் காட்டு பகுதியில் சென்று கொண்டு இருந்த பொழுது, கண்ணனை மர்ம நபர்கள் சிலர் வழிமறித்து அரிவால் தலையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனால் தலையில் வெட்டு காயத்துடன் ரத்த வெள்ளத்தில், கண்ணன் சம்பவ இடத்திலே துடிதுடித்து பரிதபமாக உயிரிழந்தார் 


மறுநாள் காலை அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்தனர்.


போலீஸ் விசாரணை


உயிரிழந்த கண்ணனுக்கும் அதே ஊரைச் சேர்ந்த திருமணம் ஆன ஒரு பெண்ணுக்கும் பல வருடங்களாக தொடர்பு இருந்ததாகவும், இதனால் கண்ணனின் மனைவி அந்த பெண்ணிடம் மற்றும் அவர்களது உறவினர்களிடமும் அடிக்கடி சண்டை போட்டு வந்தாகவும் கூறப்படுகிறது .


இந்நிலையில் காதலியின் மகன் விஜய்(23) தனது தாயிடம் காதல் குறித்து பலமுறை கண்டித்துள்ளார்.  இருந்தும் காதலை கைவிடமால் தொடர்ந்து வந்துள்ளார். காதலனை தனிமையில் சந்தித்து வந்தால் மனமுடைந்த விஜய் தாயின் காதலன் கண்ணனை கொலை செய்ய திட்டமிட்டு அவரது நண்பர்களான மானாமதி பகுதியை சேர்த்த மகேந்திரன்(28) மற்றும் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த கபில் ஆனந்த்(26) விஷ்ணு(25) ராகுல்(21) நரசிம்மன் (26) அகியோர் சேர்ந்து கண்ணனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விஜய் உட்பட்ட 6 பேரை கைது செய்து திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.