திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த உள்ள எஸ்.யூ.வனம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி ரேவதி வயது (26), இவர்களுக்கு ராகுல், ஷாலினி ஆகிய மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். மேலும், ரேவதி ஆரணியில் உள்ள தனியார் வாட்டர் கம்பெனியில் வேலைக்கு சென்றுவருகிறார். அப்போது, இலுப்பகுணம் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இதில் மணிகண்டனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். ரேவதியுடன் பழக்கம் ஏற்பட்டதால் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து விட்டார். 



அதனைத்தொடர்ந்து ரேவதி தனது குழந்தைகளை அழைத்து கொண்டு மணிகண்டனுடன் சேர்ந்து சில மாதங்களாக ஆரணியில் தனி வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து கணவன், மனைவியாக வசித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மணிகண்டனின் நண்பரான இலுப்பகுணத்தை சேர்ந்த டிரைவர் கோகுல்ராஜ் வயது (22) பெங்களூரில் காதலித்து வந்த பெண்ணை கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பெற்றோர்களின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்துள்ளார். இதனால் வீட்டிற்கு தெரிந்தால் பிரச்சனை ஏற்படும் என்பதற்காக, மணிகண்டனிடம், வீடு ஒன்றை வாடகைக்கு தரும்படி கேட்டுள்ளார். அதற்கு மணிகண்டன்தான் வசித்து வரும் வீட்டின் அருகில் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து கொடுத்துள்ளார்.


இதனால் கோகுல்ராஜ் காதல் மனைவியுடன் சேர்ந்து வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், மணிகண்டன் நேற்று முன்தினம் இரவு டிரைவர் வேலை காரணமாக செஞ்சிவரையில் சென்றுள்ளார். அப்பொழுது இரவு 8.30 மணியளவில் ரேவதி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த கோகுல்ராஜ், இலுப்பகுணத்தை சேர்ந்த அவருடைய நண்பரான டிரைவர் ஜெயசூரியாவை., வயது (22) தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆரணிக்கு வரவழைத்துள்ளார்.



அப்போது இருவரும் இணைந்து மது அருந்தியுள்ளனர். பின்னர் மணிகண்டன் வசிக்கும் வீட்டிற்கு இருவரும் சென்றுள்ளனர். அப்போது ‘வீட்டில் நண்பன் மணிகண்டன் இல்லையா' என கேட்டுள்ளனர். அதற்கு மணிகண்டன் மனைவி ரேவதி, வெளியே சென்றுள்ளார் என்று கூறியபடி தனது கணவரின் நண்பர்கள்தான் என்பதால் அவர்களை வீட்டிற்குள் அழைத்து பேசியுள்ளார். அப்போது, கோகுல் ராஜ், ஜெயசூர்யா இருவரும் திடீரென வீட்டை உள்பக்கமாக பூட்டியுள்ளனர்


பின்னர் வீட்டில் இருந்த ரேவதியின் குழந்தைகளை பக்கத்து அறையில் அடைத்து சத்தம் போடாமல் இருக்க வேண்டும், இல்லை என்றால் உங்களை கொலை செய்து விடுவோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன குழந்தைகள் அமைதியாக இருந்துள்ளனர். உடனே ரேவதியை இருவரும் சேர்ந்து படுக்கை அறைக்கு தூக்கிச்சென்று வாய், கை, கால்களைக் கட்டி விட்டு இருவரும் மாறிமாறி கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.



 


பின்னர் வன்கொடுமை செய்துவிட்டு கட்டுகளை அவிழ்த்து இது குறித்து வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என ரேவதியை மிரட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட ரேவதி, ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ரேவதி ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஆய்வாளர் அல்லிராணி வழக்கு பதிவு செய்து கோகுல் ராஜ், ஜெயசூர்யா இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் ரேவதியின் குழந்தைகளை ஒரு அறையில் தள்ளி பூட்டி விட்டு, ரேவதியின் கை, கால்களை கட்டிப்போட்டு இருவரும் கூட்டு வன்கொடுமை செய்தது தெரியவந்தது.


இதையடுத்து இருவரையும் கைது செய்து ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆரணியில் இரவு வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணை கை, கால்களை கட்டிப்போட்டு வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுதியுள்ளது