ஆந்திரா மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள கொம்மாளபுடியில் பெண் ஒருவர் நிச்சயிக்கப்பட்ட தனது வருங்கால கணவரின் கழுத்தை அறுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


நிச்சயிக்கப்பட்ட பெண் தனது வருங்கால கணவருக்கு சர்ப்ரைஸ் கிப்ட் தருவதாக தெரிவித்து மலை உச்சிக்கு வர சொல்லி இருக்கிறார். இதைகேட்டு மகிழ்ச்சியடைந்த அந்த நபரும் அங்கு செல்லவே, அந்த பெண் வருங்கால கணவரின் கண்களை மூடுமாறு கூறியுள்ளார். இளைஞனும் பரிசுக்காக கண்களை மூடியபோது, அப்பொழுது அந்த பெண் அவரை கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார்.


 விசாகப்பட்டினம் நகரை சேர்ந்த ராமுநாயுடு ஹைதராபாத் சிஎஸ்ஐஆர் நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் கொம்மாளப்புடியை சேர்ந்த புஷ்பா என்ற பெண்ணுக்கும் மே 29ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது.


ராமுநாயுடு விசாகப்பட்டினத்தில் இருப்பதால், அந்தப் பெண் தனது கிராமத்திற்குச் வருமாறு தொலைபேசியில் அழைத்தார். ராமுநாயுடு அங்கு சென்றதும் அந்த பெண் ஒரு மலையின் மேல் உள்ள கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். புஷ்பா அவனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க விரும்புகிறேன் என்று சொல்லிவிட்டு கண்களை மூட சொல்ல, இளைஞன் கண்களை மூடிய போது, திடீரென அந்த பெண் அந்த இளைஞனின் கழுத்தில் கத்தியால் அறுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். 


“என் தொண்டையை அறுத்த பிறகும் அவள் அங்கேயே நின்று கொண்டிருந்தாள். மிகுந்த சிரமத்துடன், நான் 108 ஐ அழைத்தேன், இங்கு அனகாபல்லியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டேன், ”என்று குணமடைந்து வரும் ராமுநாயுடு போலீசாரிடம் கூறினார்.


முன்னதாக, இருவரும் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்ததாக காவல்துறையில் தெரிவித்த பெண், அதன்பிறகு திருமணம் பிடிக்கவில்லை என்றும், திருமணம் செய்து கொள்ளும்படி பெற்றோர் வற்புறுத்துவதாக தெரிவித்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண