விழுப்புரம் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 5 லட்சம் மோசடி செய்ததாக அரசு ஊழியர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  புகார் அளிக்கப்பட்டுள்ளது.


புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே உத்திரவாகிணிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (வயது 34). இவர் நேற்று விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். 


மனுவில் கூறியிருப்பதாவது:- 


கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் புதுச்சேரி அருகே சேராப்பட்டை சேர்ந்த ஒருவரும், கண்டமங்கலம் அருகே சின்னபாபுசமுத்திரத்தை சேர்ந்த ஒருவரும் எனது மனைவிக்கு அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி, என்னிடம் முன்பணமாக ரூ.60 ஆயிரம் பெற்று என்னை ஏமாற்றினார்கள். இதுபற்றி வில்லியனூர் போலீசில் நான் புகார் செய்தேன். அப்போது இருவருக்கும் ஆதரவாக வந்த புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறை அரசு ஊழியரான கண்டமங்கலத்தை சேர்ந்த சேகர் என்பவர், அந்த பணத்திற்கு பொறுப்பேற்றுக் கொண்டு அவர் தருவதாக கூறினார். 


சில நாட்கள் கழித்து என்னை சந்தித்து பேசிய சேகர், தனக்கு விழுப்புரம் சமூகநலத்துறை உள்ளிட்ட பிற அரசு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் பலரை நன்கு தெரியும் என்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மூலம், உங்கள் மனைவிக்கு அங்கன்வாடி மையத்தில் ஆசிரியர் பணி அல்லது கிராம உதவியாளர் பணி வாங்கித்தருவதாக கூறினார். இதை நம்பிய நான், சேகரிடம் ரூ.5 லட்சத்து 20 ஆயிரத்து 200ஐ கொடுத்தேன். ஆனால் வேலை வாங்கி தரவில்லை. என்னை போன்று பலரிடம் அவர் மோசடி செய்துள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்.


இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.


மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங்சாய் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண