Just In





சந்தேகத்தால் வந்த வினை: மனைவியை சுத்தியலால் அடித்துக்கொன்ற கணவர்!
திருமணத்திற்கு மீறிய உறவு காரணமாக 55 வயது நபர் ஒருவர் தனது மனைவியை அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்திற்கு மீறிய உறவு காரணமாக 55 வயது நபர் ஒருவர் தனது மனைவியை அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில், 55 வயது நபர் ஒருவர் தனது மனைவிக்கு திருமணத்திற்கு புறம்பான உறவு இருப்பதாக சந்தேகித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் நூர்-உல்லா ஹைதர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தனது மனைவியை சுத்தியலால் அடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. அவர் காவல்துறையிடம் சரணடைந்தார்.
இந்த சம்பவம் நொய்டாவின் செக்டார் 15 பகுதியில் நடந்தது. பாதிக்கப்பட்ட 42 வயதான அஸ்மா கான், ஒரு மென்பொருள் பொறியாளராக இருந்தார். அவர் நொய்டாவின் செக்டார் 62 இல் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
இந்த சம்பவம் குறித்து தம்பதியரின் மகன் போலீசாருக்கு தகவல் அளித்தார். குற்றம் சாட்டப்பட்டவர் தற்போது போலீஸ் காவலில் உள்ளார். இந்த தம்பதியருக்கு 19 வயது சமத் மற்றும் 12 வயது அஸ்மா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். சம்பவத்திற்குப் பிறகு, சமத் அஸ்மாவின் சகோதரி ஃபரிதாவை அழைத்து சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.