ஜூலை 15ஆம் தேதி, ஜஹாங்கிர்புரியில் ஒருவரை துப்பாக்கியால் சுட்ட 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


சமீபத்தில், அமெரிக்காவில் உள்ள பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் ஏற்பட்ட வடுவே தீராத நிலையில், ஜூலை 4-ஆம் தேதி அமெரிக்க சுதந்தர தினத்தன்று பல்வேறு மாகாணங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 220 பேர் கொல்லப்பட்டனர். 570 பேர் படுகாயம் அடைந்தனர்.






இதற்கிடையே, ஜப்பானில் பிரசார கூட்டத்தில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் அபே சுட்டு கொல்லப்பட்டார். இம்மாதிரியான துப்பாக்கிச்சூடுகள் தொடர்ந்து நடைபெற்று வருவது பெரும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவங்களை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


குறிப்பாக, அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாட்டை கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜூலை 15ஆம் தேதி, ஜஹாங்கிர்புரியில் ஒருவரை துப்பாக்கியால் சுட்ட 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 






இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 307இன் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. 7 மாதங்களுக்கு முன்பு அந்த நபர் குற்றம்சாட்ட ஒருவரின் தந்தையை தாக்கியதாகவும், அவர்கள் பழிவாங்க வந்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.


முன்னதாக, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கிற்கு அருகில் உள்ள சோவெட்டோ டவுன்ஷிப்பில் உள்ள மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண