பொறியியல் பட்டதாரி கொகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. 5 பேரை விடுதலை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. தண்டனை விவரங்கள் வரும் மார்ச் 8-ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 






அதில், யுவராஜ், அருண் செந்தில், அருண் குமார், சங்கர், செல்வக்குமார் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகள் 10 பேருக்கான தண்டனை விவரங்களும் வரும் 8-ம் தேதி வெளியிடப்படும் என்று மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. 


இது குறித்து பேசி இருக்கும் அரசுத்தரப்பு வழக்கறிஞர் பா.பா மோகன், “கோகுல்ராஜை மிரட்டி தற்கொலை செய்வதாக வீடியோ எடுத்து பின்னர் கொலை செய்துள்ளனர் என்பது நிரூபணமாகியுள்ளது. இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக கருதப்படும் சுவாதி, பின்னர் மாற்றிப்பேசினார். இந்த வழக்கில் மொத்தம் 17 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அதில், அமுதரசி என்பவர் அப்ஸ்காண்ட்டாக இருந்தவர் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். எனவே, இதில் மொத்தம் 15 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், முக்கியமான சாட்சியான சுவாதி மாற்றி பேசினாலும் கூட இறுதியில் சாட்சியம் வென்றுள்ளது. சாட்சிகள் மாறினாலும் சாட்சியம் வென்றுள்ளது. சிசிடிவி கேமராவின் வீடியோ மிக முக்கியமான சாட்சியாக பார்க்கப்படுகிறது. 106 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு 500 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.


முன்னதாக, கோகுல்ராஜூடன், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள நடந்தை கிராமத்தைச் சேர்ந்த சுவாதி என்பவரும் ஒரே வகுப்பில் ஒன்றாகப் படித்து வந்தனர். அவர்களுக்குள் நெருக்கமான நட்பு இருந்து வந்தது. கோகுல்ராஜின் சடலம் கைப்பற்றப்படுவதற்கு முதல்நாள் அவரும், சுவாதியும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர். 

 

அர்த்தநாரீஸ்வரர் கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் சிபிசிஐடி போலீசார், அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்ததையும், கோகுல்ராஜை மட்டும் ஒரு கும்பல் தனியாக அழைத்துக்கொண்டு காரில் கடத்திச்செல்வதையும் அந்த வீடியோகாட்சிகளில் இடம் பெற்றிருந்தது. 

 

இதையடுத்து, கோகுல்ராஜின் தாயாரின் மனுவை ஏற்று கோகுல்ராஜ் கொலை வழக்கு மதுரை மவாட்ட வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் 2015 அக்டோபரில் 1ல் கீழமை நீதிமன்றம் எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அந்த ஜாமின் 2018 ஜூன் 2-ல் தேதி ரத்து செய்யப்பட்டது.

நாமக்கல் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கு, பின்னர் மதுரை வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண