பஞ்சாப், உத்தராகண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்ககளின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான 15-வது நிதிக்குழு மானியங்களை, மத்திய அரசு விடுவித்துள்ளது. 


15 வது நிதிக்குழு மானியங்கள் விடுவிப்பு:


15-வது நிதிக்குழு மானியங்களை விடுவித்தது தொடர்பாக மத்திய அரசு தெரிவித்துளதாவது,”   பஞ்சாப், உத்தராகண்ட், சத்தீஸ்கரில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2024–25 நிதியாண்டிற்கான 15-வது நிதிக்குழு மானியங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் / ஊரக உள்ளாட்சி அமைப்புகள்  ஆகியவற்றுக்கு வழங்கப்படும் இந்த மானியங்கள் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.


பஞ்சாப்:


பஞ்சாபின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, முதல் தவணையாக ரூ.225.1707 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மாநிலத்தின் தகுதியுடைய அனைத்து 22 மாவட்ட பஞ்சாயத்துகள், 146 வட்டார பஞ்சாயத்துகள்,  13144 கிராம பஞ்சாயத்துகள் ஆகியவற்றுக்கு வழங்கப்படும்.


சத்தீஸ்கர்:


சத்தீஸ்கர் மாநிலத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 15-வது நிதிக்குழுவின்  மானியங்கள், 2024–25-ம் நிதியாண்டிற்கு  2-வது தவணையாக ரூ.237.13 கோடியும், 2024–25 நிதியாண்டின் 1-வது தவணையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலுவைத் தொகை ரூ.6.9714 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளன.



உத்தரகாண்ட்:


உத்தராகண்டில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 2024–25-ம் நிதியாண்டின் முதலாவது தவணையாக ரூ.93.9643 கோடி விடுவிக்கப்பட்டுள்ளன. இந்த நிதி தகுதியுள்ள 7,769 கிராம பஞ்சாயத்துகளுக்கும், தகுதியுடைய 995 வட்டாரப் பஞ்சாயத்துகளுக்கும், மாநிலத்தின் தகுதியுள்ள அனைத்து 13 மாவட்ட பஞ்சாயத்துகளுக்கும் அளிக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.