Just In





Share Market Crash:ரூ.9 லட்சம் கோடி இழப்பு; இந்திய பங்குச்சந்தை கடும் சரிவு - சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் வீழ்ச்சி!
Share Market Crash: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.

இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய (11.02.2025) வர்த்தக நேரத்தில் ஏற்பட்ட கடும் சரிவால் முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது.
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,018.20 அல்லது 1.32% புள்ளிகள் சரிந்து 76,293.60 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 309.80 அல்லது 1.32% புள்ளிகள் சரிந்து 23,071.80 ஆகவும் வர்த்தகமாகியது.
லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்:
அதானி எண்டர்பிரைசிஸ், க்ரேசியம், ட்ரெண்ட், பாரதி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமானது.
ஈச்சர் மோட்டர்ஸ், அப்பல்லோ மருத்துவமனை, ஸ்ரீராம் ஃபினான்ஸ், கோல் இந்தியா, பாரத் எலக்ட்ரிகல், டாடா ஸ்டீல், பவர்கிரிட் கார்ப், லார்சன், பஜாஜ் ஃபின்சர்வ், ஹீரோ மோட்டர்கார்ப், டாடா மோட்டர்ஸ், கோடாக் மஹிந்திரா, ஐ.டி.சி., எஸ்.பி.ஐ., லைஃப் இன்சுரன்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெச்.யு.எல்., விப்ரோ, சன் ஃபார்மா, பி.பி.சி.அல்., டி.சி.எஸ்., டெக் மஹிந்திரா, எம்&எம், என்.டி.பி.சி., ரிலையன்ஸ், ஓ, என்.ஜி.சி., மாருதி சுசூகி, டைட்டன் கம்பெனி, டாடா கான்ஸ் ப்ராட், பஜாஜ் ஆட்டோ, இந்தஸ்லேண்ட் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எஸ்.பி.ஐ., ஹெச்.சி.எல்., ஜெ.எஸ்.டபுள்யு. ஸ்டீல், ஆக்சிஸ் வங்கி, சிப்ளா, அதானி போர்ட்ஸ், இன்ஃபோசிஸ், பிரிட்டானியா, ஹிண்டால்கோ ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.
பங்குச்சந்தை சரிவு - காரணம் என்ன?
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, வரி விதிப்பு பற்றிய பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு, இறக்குமதியாகும் இரும்பு, அலுமினியத்துக்கு 25% வரி விதிக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. ட்ரம்ப்பின் வரி விதிப்பு அறிவிப்பிற்கு பிறகு, உலக நாடுகளின் நாணயங்கள் பல மதிப்பு குறைவது, தங்கம் விலை உயர்வவது போன்ற மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.
இரும்பு, அலுமினிய இறக்குமதிக்கு தலா 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படலாம் என அறிவிப்பு வெளியானது பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதோடு, வெளிநாட்டு நிதி வெளியேற்றம் தொடர்வதாலும் பங்குச்சந்தை கடுமையான சரிவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
FII முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்து வருவது பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திங்கள் வரை ரூ.2,463 கோடி அளவிலான பங்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை ரூ.85,841 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இன்றைய வர்த்தக நேரத்தில், முதலீட்டாளர்கள் ரூ.9 லட்சம் கோடி இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, நிஃப்டி 23 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் வர்த்தமானதால் முதலீட்டாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வாசிக்க..
Thaipusam 2025 Wishes: முருகனுக்கு அரோகரா! டாப் 7 தைப்பூச திருநாள் வாழ்த்து புகைப்படங்கள்...
Trichy Tourist Places: திருச்சி போனா கட்டாயம் பார்க்க வேண்டிய டாப் 5 இடங்கள்.. மிஸ் பண்ணாதீங்க..!