இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. 


வர்த்தக நேர தொடக்கத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 421.94 அல்லது 0.54 % புள்ளிகள் உயர்ந்து 79,467.67 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 136.95 அல்லது 0.48% புள்ளிகள் உயர்ந்து 24,260.75 ஆக வர்த்தகமாகியது.


எல்.என்.டி. மைண்ட் ட்ரீ, அப்பல்லோ மருத்துவமனை, எம்&எம், டி,சி.எஸ்., விப்ரோ, டாடா மோட்டர்ஸ், க்ரேசியம், ஹிண்டாலொகோ, ஸ்ரீட்ராம் ஃபினான்ஸ், பி.பி.சி.எல். ஆகிய பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றனர்.


ஹெச்.டிஎஃப்.சி. லைஃப், எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, டைட்டன் கம்பெனி, ஏசியன் பெயிண்ட்ஸ், சன் ஃபார்மா, என்,டி.பி.சி., உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.


கடந்த ஒரு வாரமாக பங்குச்சந்தை பல்வேறு காரணங்களால் ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வந்தது. இந்நிலையில், சென்செக்ஸ், நிஃப்டி 1% உயர்ந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி உலக அளவில் பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்த நிலையில், இந்திய பங்குச்சந்தையிலும் அது பிரதிபலித்தது. 10 நாட்களில் பங்குச்சந்தை சரிவுடன் இருந்த நிலையில், இப்போது மீண்டுள்ளது. சென்செக்ஸ் 80 ஆயிரம் புள்ளிகளை எட்டியுள்ளது. 


லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்களின் விவரம்:


விப்ரோ, டெக் மஹிந்திரா, எல்.டிஎம்., மைண்ட் ட்ரீ, எம் & எம், டி.சி.எஸ்., டாடா மோட்டர்ஸ், ஹெச்.சி.எல். டெக், பி.பி.சி.எல்., அப்பல்லோ மருத்துவமனை, ஹிண்டால்கோ, க்ரேசியம். ஸ்ரீராம் ஃபினான்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்ஜி, இன்ஃபோசின்ஸ், கோடாக் மஹிந்திரா, ஈச்சர் மோட்டர்ஸ், டாடா கான்ஸ், ப்ராட், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, பவர்கிரிட் கார்ப்,ம் பஜாஜ் ஃபினான்ஸ்ம் இந்தஸ்லேண்ட் வங்கி, ஐ.டி.சி, நெஸ்லே, எஸ்.பி.ஐ., பாரதி ஏர்டெல், டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபின்சர்வ், பிரிட்டானியா, அதானி போர்ட்ஸ், ரிலையன்ஸ், சிப்ளா,  ஹீரோ மோட்டர்கார்ப், அதானி எண்டர்பிரைசிஸ், கோல் இந்தியா, டைட்டன் கம்பெனி, லார்சன், ஜெ.எஸ்.டபுள்யு, பஜாஜ் ஆட்டோ, ஏசியன் பெயிண்ட்ஸ், என்.சி.பி.சி., ஆகிய நிறுவனங்கள் மட்டும் லாபத்துடன் வர்த்தகமாகின. 


சன் ஃபார்மா, எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, ஹெச்.டி.எஃப். சி. லைஃப், ஹெச்.டி.எஃப்.சி., டிவிஸ் லேப்ஸ், மாருதி சுசூகி, டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின.