Stock Market Update:  இஸ்ரேல் - ஹமாஸ் போர் காரணமாக இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறைவடைந்துள்ளது.


பங்குச்சந்தை:


மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 405.53 அல்லது 0.61%  புள்ளிகள் சரிந்து 65,590.29 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 123.20 அல்லது 0.63 % புள்ளிகள் உயர்ந்து 19,530.30 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின. கடந்த சில வாரங்களாகவே இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வந்தது. கடந்த வாரம் முழுக்க சரிவுடன் இருந்த பங்குச்சந்தை வார இறுதியில் ஏற்றம் கண்டது. இப்போது இஸ்ரேல் - பாலஸ்தீன போர் பாதிப்பு பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது.


லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்


டாக்டர் ரெட்டி லேப்ஸ், ஹெச்.டி.எல்., டாடா கான்ஸ் ப்ராட்,டி.சி.எஸ்., ஓ.என்.ஜி.சி.  உள்ளிட்ட நிறுவனங்கள்  பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.


நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்


அதானி போர்ட்ஸ், ஹீரோ மோட்டர்கார்ப், பஜாஜ் ஃபினான்ஸ், டாடா ஸ்டீல், எஸ்.பி.ஐ., பி.பி.எல்., எம் அண்ட் எம்,, அதானி எண்டர்பிரைசிஸ், கோடாக் மஹிந்திரா வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன் கம்பெனி, அல்ட்ராடெக் சிமெண்ட், ரிலையன்ஸ், டாடா மோட்டர்ஸ்,ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, மாருதி சுசூகி, விப்ரோ,லார்சன், டிவிஸ் லேப்ஸ், இந்தஸ்லேண்ட் வங்கி, பவர்கிரிட் கார்ப், ஐ.டி.சி. சன் ஃபார்மா, டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், பாரதி ஏர்டெல், பஜாஜ் ஆட்டோ, நெஸ்லே, ஈச்சர் மோட்டர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகி வருகின்றன.


இஸ்ரேல் பாலஸ்தீன் போர் காரணமாக இன்று காலை வர்த்தக நேரத்தில் தொடக்கத்தில் இருந்தே பங்குச்சந்தை சரிவுடன் காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 279 புள்ளிகள் சரிந்து 65 ஆயிரத்து 713 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.தேசிய பங்குச்சந்தை நிஃப்டி  81 புள்ளிகள் சரிந்து 19,573    என்ற புள்ளிகளில்  வர்த்தகம் ஆனது.


அதானி போர்ட்ஸ், ஹீரோ மோட்டர்கார்ப், ஹெச்.டி.எஃப்.சி. லைஃப்,. ஹெச்.சி.எல். உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. 


இந்திய ரூபாய் மதிப்பு


அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு  2 பைசா உயர்ந்து 83.27 ஆக உள்ளது.