இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து நான்காவது ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.  இன்றைய வர்த்தக நேர முடிவில், பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. சென்செக்ஸ், நிஃப்டி புதிய வரலாறு உச்சத்தை எட்டியுள்ளது. 


அடுத்த வாரம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தை இந்த வாரமும் ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. நிஃப்டி முதன்முறையாக 24,700 புள்ளிகளில் கடந்து புதிய உச்சம் தொட்டது. சென்செக்ஸ் 81,385 புள்ளிகளை தொட்டு வரலாற்று உச்சம் தொட்டதுள்ளது. 


இன்றைய (18.07.2024) வர்த்த நேர தொடக்கத்தில் சென்செக்ஸ் 88 புள்ளிகள சரிவுடன் தொடங்கியது. சிறிது நேரத்திற்கு பிறகு வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது. 


மதியம் 2 மணி நேர அடிப்படையில், சென்செக்ஸ் 700 புள்ளிகள் அதிகரித்து 81,361.40 ஆகவும் நிஃப்டி 187.60 அதிகரித்து 24,800.60 புள்ளிகளாக வர்த்தகமானது. 


தொழில்நுட்ப நிறுவனங்களாக இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல். டெக், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்ளிட்டவை நிஃப்டியில் ஏற்றம் கண்டன. ஆட்டோமொபைல், ஃபார்மா, பொதுத்துறை வங்கிகள் அகிய துறைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின. டி.சி.எஸ், ஹெச்.சி.எல். ஆகிய நிறுவனங்கள் ஜூன் மாதத்தில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. நிஃப்டி 50-யில் ஐ.டி. பங்குகள் கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவு புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. 


வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 643.99 அல்லது 0.77 % புள்ளிகள் உயர்ந்து 81,339.71 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 177.50 அல்லது 0.72% புள்ளிகள் உயர்ந்து 24,800.90 ஆக வர்த்தகமானது.1192 பங்குகள் லாபத்துடனும் 2194 பங்குகள் நஷ்டத்துடனும் 72 பங்குகள் மாற்றமின்றியும் இருந்தன. 


லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்களின் விவரம்:


எல்.டி.ஐ. மைண்ட்ட்ரீ, டி.சி.எஸ். ஓன். என்.ஜி,சி. பஜாஜ் ஃபின்சர்வ, விப்ரோ, இன்ஃபோசிஸ், எம்& எம், எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, டெக் மஹிந்திரா, ஹெச்.யு.எல். டாடா கான்ஸ் ப்ராட், ஹெச்.சி.எல். டெக், எஸ்.பி.ஐ., சன் ஃபார்மா, ஐ.டி.சி., பாரதி ஏர்டெல், கோடாக் மஹிந்திரா, டைட்டன் கம்பெனி, அப்பல்லோ மருத்துவமனை, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, பஜாஜ் ஃபினான்ஸ், நெஸ்லே,ம் ரிலையன்ஸ்,பி.பி. சில்.எல்., லார்சம், ஆல்ஸிஸ் வங்கி, பிரிட்டானியா, டாடா மோட்டர்ஸ், டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், ஈச்சர் மோட்டர்ஸ், ஹெச்,டி.எஃப்.சி. லைஃப், மாருதி சூசுகி உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமாகின. 


ஏசியன் பெயிண்ட்ஸ், ஹீரோ மோட்டர்கார்ப், கோல் இந்தியா, க்ரேசியம், பஜாஜ் ஆட்டோ, ஜெ.எஸ்.டபுள்யு ஸ்டீல், அதானி எண்டர்பிரைசர்ஸ், என்.டி.பி.சி., அதானி போர்ட்ஸ், பவர்கிரிட் கார்ப், சிப்ளா, டாடா ஸ்டீல், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ஹிண்டால்கோ,அல்ட்ராடெக் சிமெண்ட், ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின.


விப்ரோ நிறுவனத்தின் 2024-2025 ஆம் நிதியாண்டிற்கான முதல் காலாண்டு லாப விவரங்கள் நாளை (19.07.2024) வெளியாக இருக்கிறது. -இன்ஃபோசிஸ் முதல் காலாண்டு வருவாய் ரூ.6370 கோடியாக இருந்தது. டாடா கம்யூனிகேசன் நிறுவனத்தின் முதல் காலாண்டு நிகர வருவாய் 13& அதிகரித்து ரூ.33 கோடிஉஆக இருந்தது. இது கடந்தாண்டு ஜூலை மாதத்தில் ரூ.382 கோடியாக இருந்தது1.5% -0.5% வளர்ச்சியை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.22,208.3 கோடியில் இருந்து 22,491 கோடியாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.83.65 ஆக இருந்தது. இது செவ்வாய்கிழமை 83.58 ஆக இருந்தது.