வாரத்தின் முதல் நாளே, இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 494.28 அல்லது 0. 67% புள்ளிகள் உயர்ந்து 74,742.50 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 152.60 அல்லது 0.68% புள்ளிகள் உயர்ந்து 22,666.30 ஆக வர்த்தகமாகியது.


இன்று காலை தொடங்கிய வர்த்தக நேரத்தில் சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்ந்திருந்தது. வர்த்தக நேர முடிவிலும் 494 புள்ளிகள் உயர்ந்தது. சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளன.


லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்..


ஈச்சர் மோட்டர்ஸ், மாருதி சுசூகி, எம் &எம், என், டி,பி.சி. ஜெ.எஸ்.டபுள்யு., எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, ஸ்ரீராம் ஃபினான்ஸ், டாடா கான்ஸ்,ப்ராட், க்ரெசியம், 
ரிலையன்ஸ், லார்சன், ஆக்ஸிஸ் வங்கி, ஹீரோ மோட்டர்கார்ப், டிவிஸ் லேப்ஸ், பவர்கிரிட் கார்ப், ஹின்லாகோ, பாரதி ஏர்டெல், டாடா ஸ்டீல், இந்தஸ்லேண்ட் வங்கி, ஓன்.என்.ஜி.சி., சிப்ளா, ஹெச்.டி.எஃப்.சி. லைஃப், பஜாஜ் ஃபின்சர்வ், டாடா மோட்டர்ஸ், எஸ்.பி.ஐ., அல்ட்ராடெக் சிமெண்ட், ஐ.டி.சி. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி,ஏசியன் பெயிண்ட்ஸ், பிரிட்டானியா, பஜாஜ் ஆட்டோ, கோடாக் மஹிந்திரா, டெக் மஹேந்திரா,கோல் இந்தியா, ஹெச்.யு.எல். ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின. 


நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்..


அதானி போர்ட்ஸ், நெஸ்லே, அப்பல்லோ மருத்துவமனை, விப்ரோ, சன் பார்மா, ஹெ.சி.எல். டெக், ஹெச்.டி.எஃப். சி. வங்கி, டி.சி.எஸ்., இன்ஃபோசிஸ், டைட்டன் கம்பெனி, டாக்டர். ரெட்டீஸ் லேப்ஸ், அதானி எண்டர்பிரைசர்ஸ் ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகின.