Share Market Today:  சரிவில் தொடங்கிய இந்திய பங்கு சந்தையானது, இன்றைய முடிவில் சரிவுடன் முடிவடைந்தது.


இன்று மாலை முடிவில் மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 314.72 புள்ளிகள் குறைந்து 61,666.00  ஆக புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 91.45 புள்ளிகள் குறைந்து 18,318.20 புள்ளிகளாக உள்ளது.


லாபம்-நஷ்டம்


லார்சன், ஐசிஐசி, பாரதி ஏர்டெல், எச்டிஎஃப்சி லைஃப், அதானி போர்ட்ஸ், யுபிஎல், ஓஎன்ஜிசி, ஆக்சிஸ் பங்க், ரிலையன்ஸ், ஏபிபி இந்தியா, பவர்  பைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.


டைட்டன் கம்பெணி, டாட்டா மோட்டார்ஸ், அப்போலோ மருத்துவமனை, மாருதி சுசிகி, பஜாஜ் ஆட்டோ, டென் மகேந்திரா, கோல் இந்தியா, என்டிபிசி, எச்சிஎல் டெக், கோடக் மகேந்திரா, டாடாஸ்டீல், சன் பார்மா, டிசிஎஸ், பிரிட்டானியா, ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன. 


பணவீக்கம்


அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்த  போதிலும் வட்டி விகிதம் பெரிதாக உயராது என்ற எண்ணம் முதலீட்டாளர்கள் மத்தியில் இருக்கிறது. இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில்  பணவீக்கம் குறைந்து 6.77% ஆக சரிந்துள்ளது.


மீண்டும் சூடுபிடிக்கும் போர்


உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அண்டை நாடான போலந்து நாட்டில் ரஷ்ய ஏவுகணை விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர். நோட்டா நாடுகளில் உறுப்பினராக இருக்கும் போலந்து மீது ரஷ்யாவின் தீடீர் ஏவுகணை தாக்குதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


உக்ரைன் மீது ரஷ்யா இடையிலானா போர்  மீண்டும் சூடுபிடிக்குமா என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் இருக்கிறது. இதனால் ஆசிய பங்குச்சந்தை பாதிக்கும் சூழல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எதிரொலி ஆக , இந்திய  பங்கு சந்தைகளும் இன்று சரிவில் முடிந்துள்ளன.


வட்டி விகிதம் உயருமா?


அமெரிக்காவில் பணவீக்கம்  எதிர்பார்த்த அளவுக்கு கடந்த மாதம் அக்டோபரில் உயரவில்லை. இதனால் பெடரல் வங்கி வட்டி விகிதத்தையும் பெரிதாக உயர்தாது என்ற எண்ணம் முதலீட்டாளர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கிறது. இருப்பினும் வட்டிவீதம் உயர்த்தப்படும் என்பதில் மாற்றமில்லை. ரிசர்வ் வங்கியின் அடுத்த கூட்டம் டிசம்பர் 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. கூட்டத்தின் கடைசி நாளில் (டிசம்பர் 7) அன்று வட்டி விகிதம் குறித்து முடிவு அறிவிக்கப்படும்.


மேலும் சீனாவில் கொரோனா தாக்கம் முழுமையாக முடியவில்லை. பொருளாதாரம் இயல்பு நிலைக்கு வரவில்லை என்ற கவலை முதலீட்டாளர்களுக்கு இருக்கிறது என கூறப்படுகிறது.