Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது ஏற்றத்தில் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.


மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 507.22 அல்லது 0.75 % புள்ளிகள் உயர்ந்து 63,008.91  ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 141.85 அல்லது 0.67% புள்ளிகள் உயர்ந்து 18,641.20 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது. காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ், 6 மாதங்களுக்கு பிறகு  63 ஆயிரத்தை தொட்டது முதலீட்டாளர்கள்  மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






லாபம்-நஷ்டம்


எம்எம், ஹின்டல்கோ, ஐடிசி, எச்டிஎஃப்சி வங்கி, டைட்டன் கம்பெணி, பஜாஜ் பின்சர்வ், டாடா ஸ்டீல், அல்ட்ரா டெக் சிமெண்ட், லார்சன், எஸ்பிஐ, அதானி போர்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, என்டிபிசி, டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ், கோடக் மகேந்திரா, கோல் இந்தியா, பாரதி ஏர்டெல், நெஸ்டீலே, டிசிஎஸ், கிராசிம், ஹிரோ மோட்டோகோர்ப், பிரிட்டானியா, டெக் மகேந்திரா, ஐசிஐசிஐ வங்கி, விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.


சன் பார்மா, ஓஎன்ஜிசி, மாருதி சுசிகி, எச்சிஎல் டெக், இன்போசிஸ், பிபிசிஎல், அப்போலா மருத்துவமனை, சிப்ளா, யுபிஎல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.


காரணம்


கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குச்சந்தை மந்தமாகவே காணப்பட்டது. ஆனால் வாரத்தின் முதல் நாளான இன்று வர்த்தக தொடக்கத்திலேயே பங்குச்சந்தை ஏறுமுகத்தில் இருந்ததோடு, சென்செக்ஸ் 63 ஆயிரம் புள்ளிகளை தொட்டது. சுமார் 6 மாதங்களுக்கு பிறகு சென்செக்ஸ் 63 ஆயிரம் புள்ளிகளை தொட்டது முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதன் காரணமானது, இந்திய உள்நாட்டு பொருளாதாரம் நிலவரம் ஆரோக்கியமான நிலையில் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு அதிகரிப்பால், வெளிநாட்டு முதலீடு அதிகரிப்பு போன்றவற்றையால் இந்திய பங்குச்சந்தை உயர்வுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும், இந்த வாரம் பல முக்கியமான அறிவிப்பு, முடிவுகள் வருவதால், சந்தைக்கு தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மிகுந்த கவனத்துடன் முதலீடு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.