Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது ஏற்றத்தில் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.


மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 144.85 அல்லது  0.23% புள்ளிகள் உயர்ந்து 59,433.20 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 35.55 அல்லது 0.16% புள்ளிகள் உயர்ந்து 17,428.25 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.   கடந்த ஒரு வாரமாக இந்திய பங்குச்சந்தையானது சரிவில் இருந்த பங்குச்சந்தை இன்று தொடங்கி இருப்பது முதலீட்டளார்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.






லாபம்-நஷ்டம்


எம்எம், பஜாஜ் ஆட்டோ, டெக் மகேந்திரா, டிசிஎஸ், பிரட்டானியா, இன்போசிஸ், அதானி போர்ட்ஸ், டெட்டன் கம்பெணி, ஹிரோ மோட்டோகோர்ப், சன் பார்மா, விப்ரோ, லார்சன், எச்டிஎஃப்சி வங்கி, டாடா கான்ஸ், எச்சிஎல் டெக், மாருதி சுசிகி, அல்ட்ரா டெக் சிமெண்ட், ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பின்சர்வ், கோடக் மகேந்திரா, என்டிபிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.


ஹின்டல்கோ, சிப்ளா, எஸ்பிஐ, ஓஎன்ஜிசி, பாரதி ஏர்டெல், யுபிஎல், ரிலையன்ஸ், நெஸ்டீலே உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.


கடந்த ஒரு வாரமாகவே பங்குச்சந்தை மந்தமாகவே இருந்துள்ளது. அதன் காரணமானது, அமெரிக்காவில் பணவீக்கம் குறைந்தபாடில்லாமல் இருப்பதால் அந்நாட்டு பெடரல் ரிசர்வ் வட்டி வட்டிவீகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க பொருளாதாரத்தின் எதிர்மறையான போக்கு முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், ஏழு நாட்களுக்கு பிறகு இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கியிருப்பது முதலீட்டாளர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.


ரூபாய் மதிப்பு:







இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து 82.68 ஆக  உள்ளது.