Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது ஏற்றத்தில் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.


மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 103 அல்லது 0.17% புள்ளிகள் உயர்ந்து 60,013.83 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 28.95 அல்லது 0.16% புள்ளிகள் உயர்ந்து 17,735.80 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.  நேற்றைய வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தை பலத்த அடிவாங்கிய நிலையில், இன்று ஏறுமுகத்தில் வர்த்தக தொடங்கியது முதலீட்டாளர்களை ஆறுதல் அளித்துள்ளது.


லாபம்-நஷ்டம்


டாடா மோட்டார்ஸ், எச்சிஎல் டெக், கோல் இந்தியா, மாருதி சுசிகி, என்டிபிசி, பிபிசிஎல், இன்போசிஸ், எச்டிஎஃப்சி, ஐடிசி, கோடக் மகேந்திரா, எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.


அப்போலோ மருத்துவமனை, டெக் மகேந்திரா, ரிலையன்ஸ், டிசிஎஸ், லார்சன், டைட்டன் கம்பெணி, எம்எம், சன் பார்மா, பாரதி ஏர்டெல், கிராசிம், சிப்ளா, விப்ரோ, டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.




வாரத்தின் முதல் நாளான நேற்று இந்திய பங்குச்சந்தை பலத்த அடிவாங்கியது. சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது. இந்நிலையில், இன்றைய வர்த்தகத்தில் பங்குச்சந்தை ஏற்றத்தில் இருந்தது முதலீட்டளார்களுக்கு அறுதல் அடைய வைத்துள்ளது. இந்நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு 2 பைசா உயர்ந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 81.99 ஆக உள்ளது.