Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது சரிவில் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.


மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 706 அல்லது 1.17% புள்ளிகள் குறைந்து 59,724.99 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 175.70 அல்லது 0.99% புள்ளிகள் குறைந்து 17,652.20 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது. 


கடந்த வாரம் முழுவதும் இந்திய பங்குச்சந்தை ஏற்றத்தில் காணப்பட்டது. ஆனால் வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


லாபம்-நஷ்டம்


அல்ட்ரா டெக் சிமெண்ட், நெஸ்டீலே, கிராசிம், பிரிட்டானியா, ஹின்டல்கோ, கோல் இந்தியா, டைட்டன் கம்பெணி, ஓஎன்ஜிசி, ஆக்சிஸ் வங்கி, என்டிபிசி, ஐடிசி, கோடக் மகேந்திரா, பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் பைனான்ஸ், சன் பார்மா, எஸ்பிஐ, டாடா ஸ்டீல், எம்எம் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.


டெக் மகேந்திரா, டிசிஎஸ், விப்ரோ, எச்டிஎஃப்சி வங்கி, லார்சன், சிப்ளா, அப்போலோ மருத்துவமனை, பாரதி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, சன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன. 


இந்திய பங்குச்சந்தை கடந்த வாரத்தில் ஏற்றத்தில் முடிவடைந்த நிலையில், இந்த வாரத்திலும் பங்குச்சந்தை ஏற்றத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று வர்த்தக தொடக்கத்திலேயே சென்செக்ஸ் 750 புள்ளிகள் வரை சரிந்தது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




இந்நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு 5 பைசா குறைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 81.90 ஆக உள்ளது.