Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது ஏற்றத்தில் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.


மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 122.49 அல்லது 0.20% புள்ளிகள் உயர்ந்து 59,955.49 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 40.05 அல்லது 0.23% புள்ளிகள் உயர்ந்து 17,639.20 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது. மூன்று  நாட்கள் விடுமுறைக்கு பிறகு இந்திய பங்குச்சந்தை வர்த்தகத் தொடக்கத்தில் ஏற்றத்தில் இருப்பது முதலீட்டாளர்களை சற்று ஆறுதல் அடைய வைத்துள்ளது.


லாபம்-நஷ்டம்


டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ், லார்சன், ஓஎன்ஜிசி, ஹின்டல்கோ, எம்எம், விப்ரோ, என்டிபிசி, சிப்ளா, டாடா ஸ்டீல், கிராசிம், ஐசிஐசிஐ வங்கி, பிபிசிஎல், கோல் இந்தியா, அல்ட்ரா டெக் சிமெண்ட், எச்டிஎஃப்சி வங்கி, டெக் மகேந்திரா, இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.


மாருதி சுசிகி, பிரிட்டானியா, ஐடிசி, நெஸ்டீலே, பஜாஜ் பைனான்ஸ், டாடா கான்ஸ், ஹிரோ மேட்டோகோர்ப், கோடக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.


கடந்த வாரம் முழுவதுமே இந்திய பங்குச்சந்தை சரிவுடன் காணப்பட்டது. ஆனால் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று கூறியதை அடுத்து அன்றைய நாள் வர்த்தகம் அமோகமாக இருந்தது. மேலும், பல்வேறு நிறுவனங்களின் மதிப்பும் ஏற்றமாகவே இருந்தன.


இந்நிலையில் புனித வெள்ளி, வார இறுதி நாட்கள் விடுமுறைகளுக்கு பிறகு இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்தில் தொடங்கியது. சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது முதலீட்டாளர்கள் மத்தியில் சற்று ஆறுதல் அடைய வைத்துள்ளது.