Bank FD Risk: வங்கிகளின் நிரந்தர வைப்புத்தொகை எனப்படும் எஃப்.டி., திட்டத்தில் உள்ள, 5 முதன்மையான அபாயங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


நிரந்தர வைப்புத் தொகை திட்டத்தின் அபாயங்கள்:


பொதுவாக வங்கிகளின் நிலையான வைப்பு திட்டங்களில் (Bank FDs) டெபாசிட் செய்யப்படும் பணம் முற்றிலும் பாதுகாப்பானது என்று பயனாளர்கள் நம்புகின்றனர். அதோடு, அதில் நிலையான வருமானத்திற்கான உத்தரவாதம் இருப்பது, அதில் சந்தை ஏற்ற இறக்கங்களால் எந்த பாதிப்பும் இருக்காது போன்ற அம்சங்கள் பயனாளர்களை கவர்கிறது.  ஆனால், வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பணத்தில் உண்மையில் ஆபத்து இல்லையா? முழு பணமும் பாதுகாப்பானதா? என்று கேட்டால்,  உண்மையில் அது அப்படி இல்லை என்பதே பதில். வங்கி FDகளிலும் சில ஆபத்துகள் உள்ளன. அவை விரிவாக கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


1. 100% தொகை பாதுகாப்பானது அல்ல


பொதுவாக, வங்கி FD-களில் டெபாசிட் செய்யப்படும் பணம் சந்தையில் உள்ள மற்ற பொருட்களை விட பாதுகாப்பானது. ஆனால் வங்கி இயல்புநிலையை விட மோசமான சூழலை எதிர்கொண்டாலோ அல்லது கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டாலோ, டெபாசிட் செய்தவரின் ரூ.5 லட்சம் வரை மட்டுமே பாதுகாப்பாக இருக்கும். இதே விதி நிதி நிறுவனங்களுக்கும் பொருந்தும். டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷன் (டிஐசிஜிசி) வங்கி டெபாசிட்டுகளுக்கு ரூ. 5,00,000 வரை மட்டுமே காப்பீடு உத்தரவாதம் அளிக்கிறது.


2. பணவீக்கம் லாபத்தைக் குறைக்கிறது


வங்கிகளில் நிரந்தர வைப்பு தொகைக்கான வட்டி விகிதம் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டு தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருந்தால்,  பணவீக்கத்தை சரிசெய்யும் காரணத்தால் வங்கி வைப்புத்தொகை மூலமான வருமானம் திட்டமிட்டதை விட குறைவாகவே இருக்கும். பணவீக்க விகிதம் 6 சதவீதமாக இருந்தால், FD மீதான வட்டி சுமார் 5 சதவீதமாக இருந்தால், உங்கள் வருமானம் என்பது கிட்டத்தட்ட தவிர்க்கப்படதாகவே இருக்கும்.


3. முன்கூட்டியே தொகையை திரும்பப் பெற முடியாது


வங்கிகளின் நிரந்தர வைப்பு தொகைக்கான திட்டத்தில் பணப்புழக்கம் சிக்கல் உள்ளது. தேவைப்பட்டால், முன்கூட்டியே திட்டத்திலிருந்து பணத்தை எடுக்கலாம். ஆனால் அதற்கு ப்ரீ-மெட்சூர் அபராதம் செலுத்த வேண்டும். FD மீதான ப்ரீ-மெட்சூர் அபராதம் வங்கிகளுக்கு ஏற்ப வேறுபடும்.


4. மறு முதலீட்டில் லாபமோ நஷ்டமோ இல்லை


டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்கள் குறையும் பட்சத்தில், FD இல் மறு முதலீட்டு விருப்பத்தைத் தேர்வுசெய்தால், அந்தத் தொகை தானாகவே FDக்கு திரும்பும். ஆனால், சந்தையில் வட்டி விகிதங்கள் மேலும் குறைந்தால், உங்கள் FD பழைய விகிதத்தில் இருக்காது.அதேநேரம்,  அது குறைக்கப்பட்ட வட்டி விகிதத்தில் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் முன்பை விட குறைவான வருமானத்தைப் பெறுவீர்கள்.


5. 1 நாள் வித்தியாசம் காரணமாக இழப்பு


பொதுவாக, டெபாசிட்டர்கள் 6 மாதங்கள், 1 வருடம், 2 வருடங்கள் போன்ற ஒரு ரவுண்ட் ஃபிகர் காலத்திற்கு FDயைத் தொடங்குவார்கள். சில வங்கிகளில், இந்த ரவுண்ட் ஃபிகர் காலத்திற்கான FD மீதான வட்டி விகிதம், 1 அல்லது கொஞ்சம் அதிகமாகவோ அல்லது குறைவான நாட்களாக இருக்கும். எனவே, எஃப்டியைத் திறப்பதற்கு முன், எஃப்டி காலம் மற்றும் அதற்கான வட்டியை அறிந்துகொள்வது அவசியம்.