20 வயதுகளில் உள்ள பல இளம் தொழில் வல்லுநர்களுக்கு, திருமணமாகாமல் தனியாக இருப்பது பெரும்பாலும் நிதிச் சுதந்திரமாகத் தெரியலாம். செலவுகள் கட்டுப்படுத்தக்கூடியதாகத் தோன்றுகின்றன. மேலும் சேமிப்புத் திட்டங்கள் பெரும்பாலும் 'பின்னர்' என்று தள்ளிப் போடப்படுகின்றன. 

Continues below advertisement

ஆனால் அவசரகால நிலை திருமணம் ஆனவரா? இல்லையா? என்று பார்த்து வருவதில்லை. திடீர் வேலை இழப்பு, மருத்துவச் செலவு அல்லது எதிர்பாராத இடமாற்றம் ஆகியவை ஒரு குடும்பத்திற்கு ஏற்படுவதைப் போலவே, தனியாக இருப்பவருக்கும் அவரது நிதியை மிக விரைவாகச் சீர்குலைத்துவிடும்.

எனவே, அவசரகால நிதியை ஒருபோதும் ஒரு விருப்பத் தேர்வாகக் கருதக்கூடாது. குடும்பமாக பகிரப்பட்ட பொறுப்புகளுக்குத் திட்டமிடலாம் என்றாலும், தனியாக இருக்கும் இளைஞர்களும் தங்களுக்குத் தாங்களே ஒரு வித்தியாசமான ஆனால் சமமான முக்கியமான பொறுப்பைக் கொண்டுள்ளனர். 

Continues below advertisement

நிதிப் பாதுகாப்பு இல்லாமல், ஒரு குறுகிய கால பின்னடைவு கூட கடன் வாங்குவதற்கோ, நீண்ட கால முதலீடுகளைப் பயன்படுத்துவதற்கோ அல்லது கிரெடிட் கார்டுகளைச் சார்ந்திருப்பதற்கோ வழிவகுக்கும். இவை அனைத்தும் தேவையற்ற மன அழுத்தத்தைச் சேர்க்கும்.

முன்கூட்டியே தொடங்குவது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். ஒரு கட்டமைக்கப்பட்ட சேமிப்புத் திட்டத்தின் மூலம் அவசரகால நிதியை உருவாக்குவது, நிதி ஒழுக்கத்தை உருவாக்க உதவுகிறது. இது நமக்கு மிகவும் தேவைப்படும் தருணத்தில் பணம் கிடைப்பதையும் உறுதி செய்கிறது. 

தற்காலிக சேமிப்பை போல இல்லாமல், ஒரு திட்டமிடப்பட்ட அணுகுமுறை, சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு ஆளாகாமல், இளம் சமுதாயத்தினர் சீராக நிதியைச் சேமிக்க ஒத்துழைக்கிறது. காலப்போக்கில், இந்த நிதி ஒரு பாதுகாப்பு வலையாகச் செயல்பட்டு, மன அமைதியையும், நிதி பற்றிய எந்த கவலையும் இல்லாமல் தொழில் அல்லது வாழ்க்கை முடிவுகளை எடுப்பதற்கான நம்பிக்கையையும் வழங்குகிறது.

சேமிப்புத் திட்டங்கள் இரண்டு வித நோக்கங்களை வழங்குகிறது. குறுகிய கால நிச்சயமற்ற தன்மைகளை நிவர்த்தி செய்யும். அதே வேளையில், நீண்ட கால நிதி இலக்குகளையும் ஆதரிக்கும். முன்கூட்டியே முதலீடு செய்வதன் மூலம், தனிநபர்கள் தங்கள் பணம் பெருகுவதற்கு அதிகளவு நேரத்தை வழங்கலாம். 

இது எதிர்பார்க்கப்படும் மற்றும் எதிர்பாராத வாழ்க்கை நிகழ்வுகள் ஆகிய இரண்டிற்கும் தயாராக இருக்க, அவர்களுக்கு உதவுகிறது. HDFC லைஃப் சஞ்சய் பிளஸ் (HDFC Life Sanchay Plus), நிலைத்தன்மை மற்றும் கணிக்கக்கூடிய தன்மைக்காக வடிவமைக்கப்பட்ட அம்சங்களுடன் இந்த அணுகுமுறையை ஆதரிக்கிறது. 

இது உறுதியான கொடுப்பனவுகள் மற்றும் சந்தை அபாயம் இல்லாமல், மொத்தத் தொகையாகவோ அல்லது வழக்கமான வருமானமாகவோ உத்தரவாதமான பலன்களை வழங்குகிறது, இது அவசர காலங்களில் நிதி உறுதியை உறுதி செய்கிறது. 

ஒற்றை முறை செலுத்தும் விருப்பமானது நீண்ட கால வருமானத்திற்காக ஒரு முறை முதலீடு செய்ய அனுமதிக்கிறது, இது இளம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வசதியாக இருக்கிறது. கூடுதலாக, 10 ஆண்டுகள் வரையிலான அதிக ஒத்திவைப்புக் காலம், நீண்ட வளர்ச்சி வாய்ப்பை வழங்குகிறது, இது அதிக முதிர்வு மதிப்புக்கும் வழிவகுக்குகிறது.