Just In





Gold Rate Shocks: பொதுமக்களுக்கு ஷாக் கொடுத்த தங்கம் விலை.. சவரன் ரூ.68,000-ஐ கடந்தது...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 68,000 ரூபாயை கடந்து புதிய வரலாற்று உச்ச விலையை எட்டியுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 68,000 ரூபாயை கடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
புதிய வரலாற்று உச்ச விலையை எட்டிய தங்கம்
தங்கத்தின் விலை தொடர்ந்து பல புதிய உச்ச விலையை எட்டி வருகிறது. கடந்த 26-ம் தேதி ஏறுமுகத்திற்கு மாறிய தங்கத்தின் விலை, அன்றைய தினத்தில் கிராமிற்கு 10 ரூபாய் உயர்ந்து, 8,195 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 65,560 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. 27-ம் தேதி கிராமிற்கு 40 ரூபாய் உயர்ந்த தங்கம், ஒரு கிராம் 8,235 ரூபாய்க்கும், சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 65,880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
28-ம் தேதி ஒரே நாளில் கிராமிற்கு 105 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் விலை புதிய உச்சமாக 8,340 ரூபாயை தொட்டது. அதன்படி, சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் வரலாற்று உச்சமாக, 66,720 ரூபாயை எட்டியது.
இந்நிலையில், அதையும் கடந்து, 29-ம் தேதி புதிய வரலாற்று உச்சத்தை தொட்டது. அதன்படி, தங்கம் விலை ஒரு கிராமிற்கு 20 ரூபாய் உயர்ந்து, புதிய உச்சமாக 8,360 ரூபாயை எட்டியது. ஒரு சவரன் தங்கம் 160 ரூபாய் உயர்ந்து, புதிய வரலாற்று உச்சமாக 66,880 ரூபாயை எட்டியது.
தொடர்ந்து, 30-ம் தேதி அதே விலையில் நீடித்த தங்கத்தின் விலை, நேற்று 67,000 ரூபாயை கடந்து புதிய உச்சத்தை அடைந்தது. அதன்படி, ஒரு கிராமிற்கு 65 ரூபாய் உயர்ந்து, 8,425 ரூபாய் என்ற புதிய உச்ச விலையை எட்டியது. ஒரு சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து, 67,400 என்ற புதிய வரலாற்று உச்ச விலையை தங்கம் அடைந்தது.
நேற்று மாலையே மீண்டும் கிராமிற்கு 25 ரூபாயும், சவரனுக்கு 200 ரூபாயும் உயர்ந்த தங்கம் விலை, ஒரு கிராம் 8,450 ரூபாயாகவும், சவரன் 67,600 ரூபாய் என்ற புதிய உச்சத்தை அடைந்தது.
இந்த நிலையில், இன்று கிராமிற்கு 60 ரூபாய் உயர்ந்து 8,510 என்ற புதிய உச்சத்திலும், சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 68,080 என்ற புதிய உச்ச விலையிலும் தங்கம் விற்பனையாகிறது.
ஒரு ரூபாய் உயர்ந்த வெள்ளியின் விலை
வெள்ளியின் விலையை பொறுத்தவரை, கடந்த 28-ம் தேதி கிராமிற்கு 3 ரூபாய் உயர்ந்து 114 என்ற உச்ச விலையை எட்டியது. அதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 14 ஆயிரம் ரூபாயை அடைந்தது. ஆனால், மறுநாளான 29-ம் தேதி ஒரு ரூபாய் குறைந்து, கிராம் 113 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாது. இதைத் தொடர்ந்து, நேற்று வரை அதே விலையில் நீடித்து வந்தது.
இந்நிலையில், இன்று வெள்ளியின் விலை கிராமிற்கு ஒரு ரூபாய் உயர்ந்து, கிராம் 114 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 1 லட்சத்து 14 ஆயிரம் ரூபாயாக விற்பனையாகிறது.
தங்கம் வாங்குவது எட்டாக் கனியாகிவிடும் என்று மக்கள் பயந்தபடியே, வரலாற்றில் இல்லாத புதிய உச்ச விலையை தங்கம் இன்று எட்டியுள்ளது. இதனால், பொதுமக்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.