நாளுக்கு நாள் உயரும் தங்கம் விலை

தங்கத்தின் மீதான ஈர்ப்பு மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக எதிர்கால சேமிப்பாகவும், புத்தாண்டு, தீபாவளி, பிறந்தாள் உள்ளிட்ட விஷேசங்களுக்கு பரிசளிக்கவும் அதிகளவு தங்கத்தை வாங்கி வருகிறார்கள். அதிலும் நடுத்தர வர்க்க மக்கள் தங்களது பெண் குழந்தைகளில் திருமணத்திற்காகவும் வாங்குகிறார்கள். மேலும்  மருத்து செலவு உள்ளிட்ட அவரச தேவைக்கு தங்க நகைகளை உடனடியாக அடகு வைக்கவும், விற்பனை செய்யவும் நடுத்தர வர்க்க மக்களுக்கு தங்கம் பெரிய அளவில் உதவியாக உள்ளது. எனவே தங்கம் ஒரு அட்ஷய பாத்திரமாகவே நடுத்தர வர்க்க மக்களுக்கு இருந்து வந்தது. இதன் காரணமாகவே நடுத்தர வர்க்க மக்கள் சிறிது சிறிதாக தங்கத்தை வாங்கி வருகிறார்கள்.

Continues below advertisement

 நடுத்தர வர்க்க மக்கள் அதிர்ச்சி

 மாத ஊதியத்தில் நகை சீட்டு போட்டு வாங்கு மக்களுக்கு தற்போது தங்கத்தின் விலையானது பல மடங்கு உயர்ந்திருப்பது அதிர்ச்சியை கொடுதுள்ளது. 60 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சவரன் வாங்கலாம் என திட்டமிட்டு சீட் போட்டவர்கள், தற்போது ஒரு சவரன் ஒரு லட்சத்து 30ஆயிரத்தை கடந்துள்ளதால் ஷாக்கில் உள்ளனர். இதனால் தங்க நகைகளை வாங்கும் திட்டத்தையே மறந்துள்ளனர். அந்த வகையில் தான் கடந்த ஆண்டு இதே நேரம் ஒரு சவரன் 65ஆயிரம் என விற்பனைலசெய்யப்பட்டது.

தற்போது இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக சீனா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்களது பணத்தின் மதிப்பை அதிகரிக்கும் வகையில் தங்கத்தை அதிகளவு வாங்குகிறது. இதனால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு ஒரு காரணமாகவும், ஈரான் பகுதியில் ஏற்பட்டுள்ள போர் பதற்றமும் தங்கம் விலை உயர்விற்கு முக்கிய காரணமாக  பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். 

Continues below advertisement

இந்த நிலையில் தங்கத்தின் விலையானது கடந்த 10 நாட்களில் வராலாறு காணாத வகையில் உயர்ந்தது. ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 16ஆயிரம் ரூபாய் அதிகரித்து அதிர்ச்சியை கொடுத்தது. அடுத்த 2 நாட்களில் தங்கத்தின் விலை சரசரவென 22ஆயிரம் ரூபாய் குறைந்தது. இந்த நிலையில் தினந்தோறும் ஏறி இறங்கி வரும் தங்கத்தின் விலையால் தங்க நகைகளை வாங்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தங்கம் விலை நிலவரம்

  • ஜனவரி- 3ஆம் தேதி-  தங்கம் சவரனுக்கு 2,560 ரூபாய் அதிகரித்து 1,14,160 ரூபாய்க்கு விற்பனை
  • ஜனவரி 4ஆம் தேதி - தங்கம் சவரனுக்கு 5,040 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன்  1,19,200 ரூபாய்க்கு விற்பனையானது.
  • ஜனவரி 5ஆம் தேதி- ஒரு சவரனுக்கு 4,640 ரூபாய் குறைந்து 1,14,560 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டது.
  • ஜனவரி 6ஆம் தேதி- சவரனுக்கு 1,600 ரூபாய் குறைந்து 1,12,960 ரூபாய்க்கு விற்பனை. அதே நேரம் பிற்பகல் தங்கத்தின் விலை அதிகரித்தது. கிராம் ஒன்றுக்கு 130 ரூபாயும், சவரனுக்கு 1040 ரூபாய் அதிகரித்தது. ஒரு சவரன் 1,14,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய தங்கம், வெள்ளி விலை

தங்கத்தின் விலையானது இன்று கிராம் ஒன்றுக்கு 170 ரூபாய் உயர்ந்து  14,420 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 1,360 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 15ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இதே போல வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் அதிகரித்து 285 ரூபாய்க்கும், கிலோ வெள்ளிக்கு 5ஆயிரம் ரூபாயும் உயர்ந்து 2 லட்சத்து 85ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.