Gold Rate: தொடர்ந்து அதிகரிக்கும் தங்கத்தின் விலை! வரலாறு காணாத அளவில் விலை உயர்வு!

இந்திய பங்குச் சந்தை சரிவுடன் தொடங்கிதால் அதன் தாக்கம் தங்கத்திலும் பிரதிபலித்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 அதிகரித்து சவரன் 40,440 ரூபாய்க்கு விற்பனையாகிறது

Continues below advertisement

இந்திய பங்குச் சந்தை சரிவுடன் தொடங்கிதால் அதன் தாக்கம் தங்கத்திலும் பிரதிபலித்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 அதிகரித்து சவரன் 40,440 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் 5,055 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் எதிரொலியால் தங்கம் விலை வரலாறு காணாத அளவு  உயர்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இன்று தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ. 5,055-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.736 உயர்ந்து ரூ.40,440-க்கு விற்பனையாகிறது. போலவே, வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 75.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.75,200 விற்பனையாகிறது.

உக்ரைன் போர் நெருக்கடியால் இந்திய சந்தையில் MCX இல், 10 கிராமுக்கு 1.8% உயர்ந்து ₹53,500 ஆக இருந்தது, ஆகஸ்ட் 2020 இல், இந்திய சந்தைகளில் தங்கம் அதிகபட்சமாக ₹56,200 ஐ எட்டியது. தற்போது தொடர்ந்து அதிகரித்து வரும் தங்க விலை இன்னும் ரூ.2000 அதிகரித்தால் கடந்த ஆண்டு ரெக்கார்டை தாண்டிவிடும்.

இது 18 மாதங்களில் இல்லாத அதிகபட்சமாகும். ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக தங்கத்தில் முதலீடு செய்வது கடுமையாக உயர்ந்துள்ளது.  தற்போதுவரை, உக்ரைனில் போர் குறைவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. கடுமையான ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் தடைகள் ஆகியவை பங்குச் சந்தையை கடுமையாக பாதிக்கிறது.

எண்ணெய் விலை 14-ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இது இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பாட் வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு 1.7% அதிகரித்து 26.09  டாலராகவும், பிளாட்டினம் 2.3% உயர்ந்து 1,147.19 டாலராகவும் இருந்தது.

அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் உக்ரைன் இணைய விரும்புகிறது. ஆனால் அதை ரஷ்யா விரும்பவில்லை. எனவே ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்கும் வகையில் போரை முன்னெடுத்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர்  ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உக்ரைன் ரஷ்யாவிடம் சரணடையும்வரை போரைக் கைவிடும் திட்டம் இல்லை என்பதே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் முடிவாக இருக்கிறது. இதனால், கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. இந்த வாரம் பெட்ரோல், டீசல் விலையும் உயரும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. மேலும், இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயரும் எண பொருளியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து அதிகரிக்கும் தங்கத்தின் உயர்வு விலை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Continues below advertisement

 

Continues below advertisement
Sponsored Links by Taboola