தங்கம் விலை அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கோல்ட் குரு சாந்தகுமார் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

தங்கம் விலை சவரனுக்கு லட்சத்தை தாண்டி ஏழைகளுக்கு எட்டக்கனியாக இருக்கிறது. kகடந்த 29-ம் தேதி அதிரடி காட்டி, ஒரு கிராம் 16,800 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,34,400 என்ற வரலாறு காணாத உச்ச விலைக்கு சென்றது. இந்நிலையில், 30-ம் தேதியான நேற்று, அதிரடியாக சவரனுக்கு 7,600 ரூபாய் விலை குறைந்தது. அதன்படி, ஒரு கிராம் 950 ரூபாய் விலை குறைந்து 15,850 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,26,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இன்றும் அதே அளவில் விலை குறைந்து பொதுமக்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது.

இப்போதே தங்கம் வாங்கிக்கொள்ளுங்கள்

இந்த நிலையில், தங்கம் விலை உயர்வு குறித்து சென்னை தங்க நகை வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் கோல்ட் குரு சாந்தகுமார் அதிர்ச்சி தகவல் கொடுத்துள்ளார். தங்கத்தின் விலை இறக்கம் என்பது தற்காலிகமானது என்றும் அடுத்த வாரம் மீண்டும் தங்கம் விலை உயர வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார். தற்போது, இறங்கி இருக்கக்கூடிய விலை பொதுமக்களுக்கு சாதகமாக இருப்பதால் தங்கம் வாங்க நினைப்பவர்கள் இப்பொழுது தங்கத்தை வாங்கலாம் என்று அறிவுரை கூறியுள்ளார்.

Continues below advertisement

மேலும், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும் நாளை பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டால் சவரனுக்கு ரூ.6000 முதல் ரூ.7000 வரை குறையவாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தங்கத்தின் இன்றைய விலை என்ன.?

இந்த மாதத்தின் கடைசி நாளான இன்று கிராமிற்கு 950 ரூபாயும், சவரனுக்கு 7,600 ரூபாயும் விலை குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் 14,900 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,19,200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதன் மூலம், இந்த 2 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை 15,200 ரூபாய் விலை குறைந்துள்ளது. 

 

rஅ