சென்னையில் நேற்று 22 காரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூபாய் 4 ஆயிரத்து 755-க்கு விற்கப்பட்டது. சவரன் தங்கம் ரூபாய் 38 ஆயிரத்து 040-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், ஒரு கிராம் தங்கம் ரூபாய் 31 அதிகரித்து ரூபாய் 4 ஆயிரத்து 744-க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 248 அதிகரித்து ரூபாய் 38 ஆயிரத்து 288 க்கு விற்கப்படுகிறது.


24 காரட் தங்கம் கிராமிற்கு ரூபாய் 5 ஆயிரத்து 185க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூபாய் 41 ஆயிரத்து 480-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 65.90-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 65 ஆயிரத்து 900க்கு விற்கப்படுகிறது.




ஃபெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் ஜூன் மாதத்திற்கான சந்தை எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, வரவிருக்கும் கூட்டங்களில் 75-அடிப்படை புள்ளி விகித உயர்வை நிராகரித்ததால் தங்கம் மற்றும் வெள்ளி உயர்ந்தது. பொருளாதார மந்தமான  சூழ்நிலை ஏற்படும்போது, பொருளாதார துறையைச் சேர்ந்த பங்குச் சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். அப்படிப்பட்ட சூழலில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும்.


காரணம் முதலீட்டாளர்களிடம் உள்ள ஒரு பீதியால், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும். அந்த வகையில் உக்ரைன் போர் காரணமாக தொடர்ந்து பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைந்து வருகின்றன. அதனால்  தங்கத்தின் விலையும் உயரத் தொடங்கியுள்ளது.



 





அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் உக்ரைன் இணைய விரும்புகிறது. ஆனால் அதை ரஷ்யா விரும்பவில்லை. எனவே ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்கும் வகையில் போரை முன்னெடுத்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர்  தொடர்ந்து நடைபெற்று வருகிறது.








இதனால், கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண