Financial Deadlines: 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது முதல் ஆதார் அட்டையை இலவசமாக அப்டேட் செய்ய இன்னும் ஒரு மாதம் கால அவகாசம் தான் உள்ளது.


பல்வேறு முக்கிய திட்டங்களுக்கான கெடு செப்டம்பரில் வருகிறது. 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது முதல் ஆதார் அப்டேட் வரை இதில் அடங்கும். இதில் பல கெடுக்கள் ஏற்கனவே நீட்டிக்கப்பட்டவை இப்போது அடுத்த மாதம் இறுதியில் முடிவடைகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


2000 ரூபாய் நோட்டுகள்:


புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக கடந்த மே மாதம் 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. கடந்த 2016ஆம் ஆண்டு, 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் 2000 ரூபாய் நோட்டு புழக்கம் நிறுத்தப்படுவதாக ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்திருந்தது. இதனால் 2000 ரூபாய் நோட்டை வைத்திருக்கும் நபர்கள், செப்டம்பர் 30ஆம் தேதிக்கு முன்னதாக, வங்கிகளில் டெபாசிட் செய்து மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிறு சேமிப்பு திட்டத்திற்கான பான்-ஆதார் இணைப்பு:


செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்காவிட்டால், தற்போதுள்ள வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகள் அக்டோபர் 1ஆம் தேதி முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், புதிதாக முதலீடு செய்ய விரும்பும் அல்லது சிறு சேமிப்பு திட்டத்தை தொடங்க விரும்பும் புதிய பயனாளர்கள் ஆதார்-பான் கார்ட்டை கட்டாயம் இணைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இலவச ஆதார் அப்டேட்:


ஆதார்  அட்டையை பதிவு செய்த நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ஆதாரை புதுப்பிக்க வேண்டும் என்று ஆதார் அமைப்பு தெரிவித்துள்ளது. இதைச் செய்ய ஆதார் அட்டை ஆவணங்களை இலவசமாக புதுப்பிக்கும் வசதியையும் ஆதார் அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ஆதார் அட்டை ஆவணங்களின் இலவச அப்டேட் கெடு முடிவடைகிறது. செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் ஆதார் அட்டையை இலவசமாக  அப்டேட் செய்ய வேண்டும். அதன்பிறகு, இலவசமாக ஆதாரை அப்டேட் செய்ய முடியாது.


வங்கி எஃப்டி:


பாரத் ஸ்டேட் வங்கி (SBI) மூத்த குடிமக்களுக்கான சிறப்பு நிலையான வைப்புத்தொகை திட்டம் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் எஸ்பிஐ மூத்த குடிமக்களுக்கு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான எஃப்டிகளுக்கு அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. 


அமிர்த மஹோத்சவ் எஃப்டி:


ஐடிபிஐ வங்கி தனது ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டமான அம்ரித் மஹோத்சவ்வின் செல்லுபடி காலத்தை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்த திட்டத்தின் இரண்ட கால அளவுக்கு 7.10 முதல் 7.65 சதவீததம் வட்டி தரப்பட்டது. சாதாரண குடிமக்களை விட மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதம் இத்திட்டத்தில் உள்ளது.