தமிழ்நாடு அரசின் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழநிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். பட்ஜெட்டின் முக்கிய அம்சமாக சட்டமன்ற வரலாற்றில் முதன் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இந்த திருத்திய வரவு செலவு அறிக்கை இந்த நிதியாண்டின் எஞ்சிய 6 மாதங்களுக்கு பொருந்தும் என நிதியமைச்சர் குறிப்பிட்டார். பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி 3 ரூபாய் குறைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் கடன் சுமையை சரி செய்து நிதிநிலையை மேம்படுத்துவது தாங்கள் அளித்த வாக்குறுதிகளில் ஒன்று; தேர்தல் வக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து படிப்படியாக நிறைவேற்றப்படும் என நிதியமைச்சர் சட்டமன்றத்தில் குறிப்பிட்டார். உண்மையிலேயே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளதா? பொருளாதார வல்லுநர்களிடம் கேட்டோம்...
இனி பிழைப்பு தேடி சென்னைக்கு வரவேண்டிய அவசியமில்லை. இதுதவிர கடலோர மாநிலம் என்பதால் காலநிலை மாற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பட்ஜெட் இயற்றப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காலத்தில் எதிர்பாராத அம்சமாக பெட்ரோல் வரி மூன்று ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மூன்று முக்கிய இடங்களில் மேம்பாலங்கள் வரவிருக்கின்றன. நிறுவன மோசடிகளைத் தடுக்க மறு டெண்டர் கொண்டுவரப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.இவை அனைத்துமே வரவேற்கக்கூடிய அம்சம்தான்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
மோசடி நிறுவனங்கள் மீதான நடவடிக்கை என்பது அதிமுகவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டிருக்கும் திட்டம். டிஜிட்டல் முறை கல்வி ஏற்கனவே பெருந்தொற்று காலத்தில் நடைமுறையில் இருக்கிறது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் டிஜிட்டல் கல்வி எனப் புதிய திட்டம் போல அறிமுகம் செய்கிறார்கள். ஏற்கெனவே மடிகணினி கடந்த ஆட்சி காலத்தில் மாணவர்களுக்கு இலவசமாகக் கொடுக்கப்பட்டது.அதை அப்டேட் செய்து தற்போது ஒன்றியவாரியாகப் பள்ளிகளுக்கு 40 டேப் (Tab) அளிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். கீழடி அகழ்வாராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு மட்டும் வரவேற்க்கக் கூடிய விஷயமாக இருக்கிறது. மற்றபடி இது பற்றாக்குறை பட்ஜெட்தான். இது வெள்ளை அறிக்கை விடும்போதே எதிர்பார்க்கப்பட்டது" எனக் குறிப்பிட்டுள்ளார்.