சென்னையில் நேற்று ஆபரணத்தங்கம் 22 காரட் கிராமிற்கு ரூபாய் 4 ஆயிரத்து 740க்கு விற்கப்பட்டது. சவரன் தங்கம் ரூபாய் 37 ஆயிரத்து 920க்கு விற்கப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூபாய் 15 அதிகரித்து ரூபாய் 4 ஆயிரத்து 755க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 120 அதிகரித்து ரூபாய் 38 ஆயிரத்து 40க்கு விற்கப்படுகிறது. சென்னையில் மீண்டும் தங்கம் விலை அதிகரித்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


24 காரட் தங்கம் ரூபாய் 5 ஆயிரத்து 154க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 41 ஆயிரத்து 232க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 66க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 66 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது.  




இந்தியக் குடும்பங்களில் தங்கத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திருமணங்களின்போது மணமகள் அணியும் தங்க ஆபரணங்களை வாங்குவதற்கு சென்னை புகழ் பெற்ற இடமாக விளங்குகிறது. அதனால் தான் மக்கள் தங்கத்தை ஆபரணமாக வாங்க விரும்புகிறார்கள். தங்கம் என்றைக்குமே ஒரு சேமிப்பாக பார்க்கப்படுகிறது. இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இதர முதலீடுகளைப்போல தங்கத்தில் முதலீடு செய்வதில் எந்த சட்ட சிக்கல்களும் கிடையாது. தரம் மட்டுமே முக்கியம்.











அதற்கு நம்பிக்கையான இடத்தில் தங்கத்தை வாங்குவது அவசியம். எப்போது வேண்டும் என்றாலும் வங்கிகளிலோ, நிதி நிறுவனங்களிலோ தங்கத்தை அடகு வைத்து பணம் பெறலாம். ஆக.. தங்கத்தில் செய்யப்படும் முதலீடும் ஒரு வகையில் இன்று லாபம் தரும் வணிகமாகவே கருதப்படுகிறது. தங்கம் என்றென்றும் சேமிப்புக்கானதாய் பார்க்கப்படுவதால், அதன் விலை தொடர்ச்சியாக மக்களால் கண்காணிக்கப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண