இந்திய வரலாற்றில் தொடர்ச்சியாக ஏழாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் என்னும் பெருமையைப் பெற்று இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன். பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் ஒவ்வொரு முறையும் நிர்மலா சீதாராமன் அணிந்திருக்கும் புடவையும், புடவைக்கு பின்னால் அவர் வைத்திருக்கும் செண்டிமெண்ட்டும் பேசுபொருளாகும். இன்றும் அவரது ஆஃப் வெள்ளை - ஊதா நிறத்திலான கைத்தறி புடவை பேசுபொருளாகியுள்ளது.






கைத்தறி புடவைகள் அணிவது அவருக்கு விருப்பமானது என்பது, ஒவ்வொரு பட்ஜெட் தாக்கலின்போதும் அவர் அணிந்துவரும் புடவைகளைப் பார்த்தாலே புலனாகும். பட்ஜெட் எதிர்பார்ப்புகள், குறைகள், நிறைகளை விவாதிப்பது இன்றைய முக்கிய வேலையாக இருக்கும் என்றால், ஒருபுறம் இன்ஸ்டா, ஃபேஸ்புக்கில் ஒரு கூட்டம் அவர் அணிந்துவரும் புடவை, அதன் சிறப்புகள் ஆகியவற்றைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.


பாரம்பரியமாக தொடரப்படும் வழக்கமாக, குடியரசு தலைவர் திரெளபதி முர்மு இனிப்பு வழங்க அதை சாப்பிட்டுவிட்டு பட்ஜெட் தாக்கல் செய்ய புறப்பட்டார் நிர்மலா சீதாராமன்.