தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளில், வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் 5-வது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், நிதி ஒதுக்கீடு குறித்த முழு விவரங்களை இங்கே காணலாம்.


வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி நிதி ஒதுக்கீடு



  • வேளாண் துறைக்கு மொத்தமாக இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.45,661 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • ரூ.8,186 கோடி - உழவர்களின் இலவச மின் இணைப்புக்கான கட்டணத் தொகை ஒதுக்கீடு.

  • ரூ.2,000 கோடியில் 80,000 இயற்கை மேலாண்மைப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

  • ரூ.1,427 கோடி - வரும் ஆண்டில் பயிர்க்கடன் தள்ளுபடிக்கான நிதி ஒதுக்கீடு.

  • ரூ.1,168 கோடியில், 3 லட்சம் ஏக்கரில் நீர் ஆதாரத்தை திறம்பட பயன்படுத்த நுண்ணீர்ப் பாசன திட்டம்.

  • ரூ.297 கோடி - கரும்புக்கு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ஒதுக்கீடு.

  • ரூ.269 கோடியில், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம், 2,335  ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும்.

  • ரூ.215.80 கோடி - விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் இயந்திரங்களை வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு.

  • ரூ.160 கோடியில் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய நெல் சிறப்பு தொகுப்பு திட்டம்.

  • ரூ.108 கோடியில் எண்ணெய் வித்து பயிர்களை அதிகரிக்க 7.14 ஏக்கரில் 90,000 விவசாயிகள் பயன்பெறும் வகையில் திட்டம்.

  • ரூ.102 கோடியில், டெல்டா அல்லாத மாவட்டங்களில் பயிர் சாகுபடியை அதிகரிக்க சிறப்பு தொகுப்பு திட்டம்.


 



  • சிறு தானிய இயக்கத்தை செயல்படுத்த ரூ.52 கோடி ஒதுக்கீடு.

  • விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்க ரூ.52 கோடி ஒதுக்கீடு.ஒ

  • ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.50.79 கோடி.

  • விவசாயிகள் 3 லட்சம் ஏக்கரில் கோடை உழவு செய்ய ஹேக்டேருக்கு ரூ.2,000 மானியம் வழங்க ரூ.24 கோடி ஒதுக்கீடு.

  • 63,000 உழவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.22 கோடியில் மலைவாழ் உழவர் முன்னேற்ற திட்டம் செயல்படுத்தப்படும்.

  • நிலமற்ற வேளாண் தொழிலாளர்கள் விபத்து மரணத்திற்கான இழப்பீடு, 1-லிருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்வு.

  • மக்காச்சோள உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டம் ரூ.40 கோடியில் செயல்படுத்தப்படும்.

  • ரூ.20 கோடியில் 9 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும்.

  • 2,925 கி.மீ நீள கால்வாய்களை தூர்வார ரூ.13.80 கோடி ஒதுக்கீடு.

  • 37 மாவட்டங்களில் இயற்கை வேளாண்மை திட்டத்தை செயல்படுத்த ரூ.12 கோடி ஒதுக்கீடு.

  • சீமைக்கருவேல மரங்களை அகற்றிவிட்டு மிளகாய் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.11.74 கோடி.

  • ஏழை மகளிர் நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு.

  • ரூ.6 கோடியில் வேளாண் தர நிர்ணய ஆய்வகம் அமைக்கப்படும்.

  • 100 புதிய மழை நீர் சேமிப்பு கட்டமைப்பை உருவாக்கவும், இருப்பவற்றை மேம்படுத்தவும் ரூ.2.75 கோடி.

  • அதிக உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு விருது வழங்க ரூ.55 லட்சம் ஒதுக்கீடு.

  • ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு மானியத் தொகை 40%-த்திலிருந்து 60%-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

  • தென்னை பயிர் செய்யப்படும் மாவட்டங்களில் பூச்சி தாக்கத்தை கட்டுப்படுத்த ரூ.4 கோடி ஒதுக்கீடு.