சேதக் வாகனத்தின் உற்பத்தியை அதிகரிப்பதோடு 2028 நிதியாண்டில் தனது முதல் மின்சார பைக்கை அறிமுகப்படுத்த உள்ளதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

இ-பைக் தயாரிப்பில் பஜாஜ்

இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவலின்படி ஏற்கனவே சந்தையில் உள்ள ஸ்கூட்டி மாடலான சேதக் ரக வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுடன் சேர்த்து தனது மின்சார வாகனப் பிரிவை விரிவுபடுத்தும் நோக்கில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது முதல் மின்சார மோட்டார்சைக்கிளை அடுத்த நிதியாண்டில் அறிமுகப்படுத்தும் என தெரிவித்துள்ளது.

Continues below advertisement

2026-2027 நிதியாண்டின் முதல் காலாண்டு வருவாய் அறிக்கையின்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், சேதக் வாகனங்களுக்கான தேவை அதிகமாக உள்ளதாக அதன் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

Also Read: Cheapset 9 Seater: நாட்டின் மலிவான 9 சீட்டர் - ரக்கட் எஸ்யுவி, டீசல் எடிஷன், 840KM மைலேஜ் - EMI விவரங்கள்

இருசக்கர வாகனப் பிரிவில் தனது முதல் மின்சார வாகனக் களத்திற்காக, இந்த பிராண்ட் 'சேதக்' என்ற பெயரை மீண்டும் கொண்டு வந்தது நல்ல பலனையும் அளித்துள்ளது. இது தற்போது உள்நாட்டு சந்தையில் அதிகம் விற்பனையாகும் மின்சார ஸ்கூட்டர்களில் ஒன்றாகும். 'ஃப்ரீடம் சிஎன்ஜி' மாடல் சுமாரான வெற்றியை மட்டுமே அடைந்த நிலையில், பஜாஜ் நிறுவனம்  தற்போது பிரதான உற்பத்தியாளர்களிடமிருந்து போதுமான பங்களிப்பு இல்லாத அதிகம் ஆராயப்படாத சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலான மோட்டார் சைக்கிள் பிரிவில் கால் பதிப்பதாகத் தெரிகிறது.

புதிய உச்சத்தை எட்டிவரும் இ-பைக் விற்பனைகள்

2026 ஏப்ரல் ஜூன் காலாண்டில் தங்களது உள்ளூர் வணிகத்தில் மின்சார வாகனங்கள் சுமார் 30 சதவீதப் பங்களிப்பை வழங்கியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.  விநியோகத் தடைகளைச் சமாளிக்கும் பொருட்டு சேதக் நிறுவனத்தின் மாதாந்திர உற்பத்தித் திறன் அடுத்த சில மாதங்களில் 50,000 யூனிட்டுகளிலிருந்து 60,000 யூனிட்டுகளாக அதிகரிக்கப்படும். மின்சார இருசக்கர வாகனப் பிரிவில் போட்டி புதிய உச்சத்தை எட்டிவரும் வேளையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 டிவிஎஸ் மோட்டார், ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஏதர் எனர்ஜி உள்ளிட்ட பிராண்டுகள் எதிர்கால மேம்பாட்டிற்காக  தங்களது மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பு வரிசையை வலுப்படுத்தியுள்ளன. இந்தத் தயாரிப்பு மேம்படுத்தலுடன் பஜாஜ் ஆட்டோ நிறுவனம், ஏப்ரல்-ஜூன் 2026 காலகட்டத்திற்கான தனது வரலாற்றிலேயே மிக உயர்ந்த காலாண்டு நிதி செயல்திறனைப் பதிவு செய்துள்ளது. ஏனெனில், செயல்பாடுகளின் மூலம் கிடைத்த வருவாய் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 37 சதவீதம் அதிகரித்து ரூ. 17,244 கோடியாக உயர்ந்துள்ளது.

அந்நிறுவனத்தின் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் இரண்டிலும் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்தது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், மின்சார வாகன வணிகத்தின் வருவாய் கிட்டத்தட்ட இருமடங்காகியுள்ளது.

ஆனால், உற்பத்தித் திறன் மற்றும் உதிரிபாகங்கள் கிடைப்பதில் உள்ள சிக்கல்களால் உற்பத்தி குறைவாகவே இருந்ததாக அந்நிறுவனம் தெரிவித்தது. அதே நேரத்தில், பல்சர், அவெஞ்சர் மற்றும் டோமினார் ரகங்கள் ஆண்டுக்கு ஆண்டு இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்தன. 125 சிசி முதல் 160 சிசி வரையிலான பல்சர் ரகங்களில் அடுத்தடுத்த அப்டேட்டுகளை திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பஜாஜ் ஆட்டோ உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


Car loan Information:

Calculate Car Loan EMI