வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா வழியே பாயும் பாலாற்றில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழையால் பெய்து வந்த தொடர் கன மழையினாலும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரினாலும், குடியாத்தம் நகருக்குள் பாயும் கவுண்டன்ய மகாநதி, மற்றும் மேல்பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டதால் பள்ளிகொண்டா பாலாற்றில் வரலாறு காணாத அளவில் சுமார் 80 ஆயிரம் கனஅடிக்கும் மேலாக வெள்ளம் ஏற்பட்டது. இந்நிலையில் பள்ளிகொண்டா பாலாறு பாலத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் பாலாற்றின் நடுவில் தென்னை ஓலையில் குடிசையாக கட்டப்பட்ட சிறிய சிவன் கோவில் அமைந்துள்ளது. இதனை அப்பகுதி மக்கள் பக்தியுடன் வணங்கிவருகின்றனர்.
இக்குடிசை கோவிலானது கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக அப்பகுதி பாலாற்று மணலில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் கையில் கல் போன்ற ஒரு பொருள் பெரியதாக தெண்பட்டுள்ளது. இதனை சிறுவர்கள் அப்பகுதியில் உள்ளவர்களிடம் கூறியுள்ளனர். இது குறித்து அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தகவல் அறிந்து சிறுவர்கள் சுட்டிக்காட்டிய இடத்தில் சென்று பார்த்த போது அங்கு சிவன் லிங்க வடிவிலான மரகதம் சிலைகளை இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பாலாற்று மணலில் கண்டெடுத்த சிவலிங்கத் பொது மக்கள் ஆராய்ந்த போது இச்சிலைகளில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகளின் அடிப்படையில் இவை 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையாக இருக்கலாம் என்று கருதப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த சிலைகள் கண்டெடுக்கப்பட்ட பாலாற்றின் நடுப்பகுதியிலேயே கம்புகளை கொண்டு ஒரு தென்னை ஓலை குடிசை அமைத்து அதில் கண்டெகுக்கப்பட்ட சிவலிங்கத்தை பிரதிஷ்ட்டை செய்து அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொது மக்களால் கோயிலாக பராமரிக்கப்பட்டு வழிபட்டு வருகின்றனர். மேலும் இதற்க்கு ஆதி பரமேஸ்வரி கோயில் என்றும் பெயரிடப்பட்டு தினமும் ஆராத்தி, அபிஷேகம், பூஜைகளையும் செய்து வருகின்றனர்.