நாம் அனைவரும் ஓடி ஓடி உழைப்பதன் காரணம் என்ன? நம் குடும்பம் எப்போதுமே செல்வ செழிப்புடன் இருக்க வேண்டும்
ன்ற ஒரே ஒரு காரணத்தால் தான். நாம் வசிக்கும் வீடு வாஸ்து சாஸ்திர படி இருக்க வேண்டும் என்று பலரும் நினைப்பதுண்டு. ஆனால் வாடகை வீட்டிலோ அல்லது கட்டிய வீட்டை வாங்கினாலோ சில சமயங்களில் இதை நம்மால் சரி செய்ய முடியாது. அது போன்ற நேரங்களில் சில வழிமுறைகளை நாம் செய்வதன் மூலம் நம்மால் ஓர் அளவிற்கு நன்மை அடைய முடியும். பொதுவாக சமையலறை என்பது சுக்கிர பகவானின் ஆதிக்கம் நிறைந்த ஒரு இடம். அங்கு சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் மேன்மை அடையலாம் என நம்பப்படுகிறது. அந்த வகையில் நம் சமயலறையில் சில படங்களை வைப்பது மூலம் நம்முடைய செல்வத்தையும் செழிப்பையும் அதிகரிக்க முடியும் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.

 



சமையலறை வாஸ்து:

சமையலறை தான் வீட்டின் முக்கியமான ஒரு இடம். அதனால் அதை சுத்தமாகவும், அழகாகவும், அதிர்ஷ்டமாகவும் வைத்து கொள்வதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். நம் சமயலறையில் சில படங்களை வைப்பதன் மூலம் நன்மையடையலாம். என்றுமே நம் சமயலறையில் அன்னபூரணி அன்னை நிலையாக தங்கி இருக்க வேண்டும். அதனால் அன்னை அன்னபூரணியின் படம் இருக்க வேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்களின் அழகான படத்தையும் வைக்க வேண்டும். இந்த படங்களை வீட்டின் சமயலறையில் வைக்கும் போது வீட்டில் உணவுக்கும், பணத்துக்கும் என்றுமே பஞ்சம் வராது என நம்பப்படுகிறது. தானியங்கள் எல்லாம் வீட்டில் என்றுமே நிறைந்திருக்கும். மேலும் வீட்டில் செழிப்பும் மகிழ்ச்சியும் பொங்கும். பற்றாக்குறை என்பது என்றுமே வராது என நம்பப்படுகிறது

சமையலறை வாஸ்து:

வாஸ்து சாஸ்திரத்தின் படி சமையலறையின் தெற்கு பகுதி அல்லது தென்கிழக்கு பகுதியில் ஏதாவது பிரச்சனைகள் இருந்தாலோ அல்லது கட்டப்படாமல் இருந்தாலோ உடனே அது சரி செய்யப்பட வேண்டும். மேலும் வடகிழக்கு மூலையில் குங்கும நிறத்திலான விநாயகரின் படத்தை வைக்க வேண்டும். வடகிழக்கு பகுதியில் திறந்த நிலையில் நவதானியங்களை ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்க வேண்டும். இதனால் தன தானியம் குறைவின்றி நிறைந்து இருக்கும். அதை அவ்வபோது மாற்றவேண்டும் என நம்பப்படுகிறது
சமையலறை எப்படி இருக்க வேண்டும்?


சமையலறை எப்போதுமே சுத்தமாகவும், ஈரப்பதம் இல்லமல் காய்ந்த நிலையில் இருக்க வேண்டும். அதை பின்பற்றாவிட்டால் செல்வம் குறைந்து வறுமை ஏற்படும். தண்ணீர் எப்போதுமே சிந்த கூடாது என கருதப்படுகிறது