23 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்றது வைத்தீஸ்வரன் கோவில் குடமுழுக்கு..

பிரசித்தி பெற்ற வைத்தீஸ்வரன் கோவில் குடமுழுக்கு விழா 23 ஆண்டுகளுக்கு பின் கடும் கட்டுகளுடன் விமர்சையாக நடந்தது.

Continues below advertisement

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது.  இந்த கோவிலில் நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு உரியதாகும், தீராத நோய்களைத் தீர்க்கும் என்ற நம்பிக்கை கொண்ட தலமாக விளங்கி வருகிறது.

Continues below advertisement


இத்தகைய பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குடமுழுக்கு திருவிழா, 23 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நடைபெற்றது. இதில் 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்த்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற அறிவுத்தலின்படி, தமிழக அரசின் கொரோனோ பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உள்பட்டு பக்தர்கள் அனுமதியின்றி குடமுழுக்கு விழா கோவில் ஊழியர்கள் மட்டும் கலந்து கொண்டு நடைபெற்றுள்ளது. 


 
முன்னதாக கடந்த 25 ஆம் தேதி 147 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு முதல் கால யாகசாலை பூஜைகளுடன் துவங்கிய இன்று 8 ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்று தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. 

 
கொரோனா கட்டுப்பாடு காரணமாக கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் வந்து விடக் கூடாது என்பதற்காக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா வைத்தீஸ்வரன் கோவிலில் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும், சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
 
Continues below advertisement